Oct 21, 2012

இழிவான வழியில் விளம்பரம் தேடும் நடிகர் சரத்குமார்!


Oct 22: கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தியைத் தொடங்க வலியுறுத்தி அக். 31-ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.

"ஏன் வேண்டும் கூடங்குளம்' என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு குறித்து விளக்கப் புத்தகம் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும். கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தியைத் தொடங்கக் கோரி எனது தலைமையில் கோயம்புத்தூரிலிருந்து கூடங்குளம் வரை விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து உதயகுமாருடன் விவாதிக்கத் தயார். காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது, சாதி உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவது போன்றவற்றை உதயகுமார் கைவிட வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியிருப்பதுபோல், கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பதை அனைவரும் நம்புவோம் என்று கூறினார்.

சிந்திக்கவும்: கலை கூத்தாடிகளின், கடைசி புகலிடம் அரசியல் என்று ஆகிவிட்டது. இவர்கள், அரசியலில் வந்து அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. பெரும்குடிகாரர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து எதிர்கட்சி தலைவராக இருந்து பின்னர் செல்லாகாசாகி போனார்.

இந்த கூத்தாடி சரத்குமார் கட்சி ஆரம்பித்து எதுவும் சிறப்பாக சாதிக்க முடியவில்லை. கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பது மூலம் பெயரும் புகழும் அடையலாம் என்று தப்பு கணக்கு போடுகிறார். மக்கள் போராட்டத்தை சாதிய போராட்டம் என்று கொச்சைபடுத்தியது மூலம் நடிகர் சரத்குமார் ஒரு இழிவான பேர்வழி என்பது நிரூபனம் ஆகிறது.

கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பானது என்று புத்தகம் அடித்து வெளியிட போகிறாராம். அணுவையும், குழந்தைகளையும் நேசிக்கும் அதிசய விஞ்சானி அபுல்காலாமும் அவரது விஞ்சான கூட்டமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு பதில் சொல்லாமல் ஓடி போயி விட்டார்கள். இப்பொழுது திடீர் என்று முளைத்திருக்கிறார் இந்த சரத்குமார். முதலில் தோழர் முத்து கிருஷ்ணன் பேசி இருக்கும் விடியோவிற்கு முதலில் பதில் சொல்லட்டும் பின்னர் இவர் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தலைவர் உதயகுமார் மற்றும் நண்பர்களுக்கு சாவல் விடட்டும்.

குறிப்பு: அணு உலைகளின் தீமைகள் குறித்து அறிந்து கொள்ள சிந்திக்கவும் இணையத்தில் வலதுபுறம் இணைக்கப்பட்டுள்ள தோழர் முத்து கிறிஷ்ணனின் விடியோவை பாருங்கள்

6 comments:

மர்மயோகி said...

எதில்தான் ஆபத்து இல்லை...?
இவ்வளவு விஞ்ஞானிகள் - மற்றும் அதிகாரிகள் அணு உலை பாதுகாப்பு பற்றி உத்தரவாதம் அளித்தும், அமெரிக்க கைக்கூலி உதயகுமார் சொல்வதுதான் வேதவாக்கு என்றால் இது சாதிய போராட்டம் அன்றி வேறென்ன?
இதே உதயகுமாரை அமெரிக்காவின் பெப்சி கொக்கா கோலாவிற்கு எதிராக போராட்டம் நடத்த சொல்லுங்களேன்.அதில் இல்லாத ஆபத்தா ? அணுமின் நிலையம் வேண்டாமாம்...மின்சாரம் வேண்டுமாம்..ஏனிந்த இரட்டை நிலைப்பாடு..ஏனிந்த ஓலம்? கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஓலமிடுவோரும், விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளும் ஒன்றினைந்திருப்பதை பாரீர்..இவர் நோக்கம் அறிவோம்....தேச துரோகிகள் தமிழ்பற்று போர்வையில் ஜாதிவெறியை வளர்க்கும் நாசகார சக்திகளையும் அமெரிக்க கைக்கூலிகளையும் அடித்து விரட்டுவோம்..சிந்திக்கவும்..நியாயமாக சிந்திக்கவும்

Tamil News Service said...

மக்கள் மன்றத்துக்கு இவர் எப்படி தேர்ந்தெடுக்க பட்டார் என்றே தெரிய வில்லை.

riyas said...

anna marmayogi,
narayanasamy mathiri neengal pesa kodathu.ellavatrilum aabathu illamal illai.antha aabathin vilaivu enna entru konjam sinthiyungal.

valampuri said...

I'm not read this article. Don't waste your time in writing this man.

Anonymous said...

Marmayogi sir, ella naadugalum anuulaikalai padipaddiyai moodikkondu varumvelaiyil, pakkaththil pallam irukku vilunthu vidathey entru sonnaal thittuvathai viduththu kannai thiranthu paarum. arasu anuvukkau mattraga, veru ethaiyum sinthikka vendum entra pothu arivu kooda illaiya ?

PUTHIYATHENRAL said...

வணக்கம் மர்மயோகி நண்பரே... ஏன் இந்த கொலை வெறி. நீங்கள் கூடங்குளத்தில் வசித்தால் அதைப்பற்றி பேசுங்கள். நீங்கள் வேறு நாட்டிலோ அல்லது வேறு ஊரிலோ வசித்தி கொண்டு அணு உலை வேண்டும் என்று கூப்பாடு போடுவது முறையல்ல. நீங்கள் நேசிக்கும் மன்மோகன் சிங் அமெரிக்காவின் கை கூலி என்பதில் எங்கள் யாருக்கும் சந்தேகம் இல்லை. உதயகுமார் அமெரிக்காவில் வாழ்ந்தவர் என்பதனால் அவரை பற்றி பேசவேண்டாம். தினமலரின் பார்பன ஊளைக்கும் உங்களது ஊளைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.