Sep 17, 2012

இலங்கை ராணுவத்திற்கு மறைமுக பயிற்சி!

Sep 18: இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ராணுவப் பயிற்சியில் இந்திய வீரர்கள் சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட 5 நாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு வசதியாக இந்தப் பயிற்சி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேரும் இலங்கையின் முப்படையைச் சேர்ந்த 2,000 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

சிந்திக்கவும்: அரசு பயங்கரவாதிகள் எல்லோரும் ஓரணியில் சேர்ந்திருக்கிறார்கள். எலியும் புனையும் ஆன இவர்களுக்குள் அப்படி என்ன விசயத்தில் ஒற்றுமை. பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள. ஆகா பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை செய்வது யார்? இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை இவர்கள் நான்கு பேரும் பெரிய பயங்கரவாதிகள் ஆச்சே!

இந்த அரசு பயங்கரவாதிகள் மக்கள் போராட்டங்களை, விடுதலை போர்களை ஒடுக்க பகைமை மறந்து அணி சேர்ந்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்! மக்கள் எழுச்சி உண்டாகி விட கூடாது. மக்கள் போராட்டங்களை ஒடுக்க ஒரு பயிற்சி. என்ன பயங்கரவாதம் செயல் இங்கே நடக்கிறது? எதை கட்டு படுத்த முடியாமல் இவர்கள் திணறுகிறார்கள்? ஏன் இந்த கொலைவெறி பயிற்சி!

ஒன்று மட்டும் நல்லா தெரியுது, இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற பயங்கரவாத அரசுகள் ஒன்றாய் சேர்ந்து இலங்கைக்கு மறைமுகமாக பயிற்சி கொடுக்கிறார்கள். இந்த பயிற்ச்சியில் இலங்கை மட்டும் இருந்தால் தங்கள் குட்டு அம்பலமாகி விடும் என்று மாலதீவு, வங்கதேசம் போன்ற நாடுகளை கூட்டுக்கு சேர்த்து கொண்டார்கள். இது முழுக்க முழுக்க இலங்கை ராணுவத்திற்கு கொடுக்கப்படும் பயிற்ச்சியே.

ரௌத்திரம் பழகு
...யாழினி...

2 comments:

Anonymous said...

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வெறு நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தங்களின் கருத்துக்கள், இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 46 அறிக்கைகளை ஐ.நா.விடம் அளித்துள்ளன.

Anonymous said...

கடந்தமுறை தங்களுக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து,அதை நீர்த்துப் போகச்செய்த இந்தியா, இம்முறையும் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை காக்கும் என்று இலங்கை அரசு நம்புகிறது.

இதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஆதரவை திரட்டவே இலங்கை அதிபர் இராசபட்சே நாளை மறுநாள் (செப்டம்பர் 18) இந்தியா வருகிறார். போர் முடிந்த பிறகு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்கனவே அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு ஆதரவாக மீண்டும் ஒருமுறை இந்தியா செயல்பட்டால் இனப்படுகொலைகளுக்கு துணை போகும் நாடு என்ற தீராப்பழி ஏற்பட்டுவிடும்.