Aug 3, 2012

படித்த கொலைகாரர்களா? படிக்காத மேதைகளா?

செய்தி: தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போலி டாக்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் 9 மற்றும் 10&ம் வகுப்பு படித்துவிட்டு, கிளினிக் நடத்தி வந்தது அம்பலமாகி உள்ளது. இந்த சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

விளக்கம்:
அட இந்த போலி டாக்டர் ஆவது பரவாயில்லை இவர்கள் விட கேடுகெட்டவர்கள் தாம் நமது படித்த பட்டம் பெற்ற டாக்டர்கள். நம்ம படித்த போலி டாக்டர்கள் தரமற்ற  போலி மருந்து கம்பெனிகளில் இருந்து பணத்தை வாங்கி கொண்டு மட்டமான மருந்துக்களை மக்களுக்கு எழுதிக்கொடுக்கும் கயவர்கள்..

அதுமட்டுமா தேவை இல்லாத விசயங்களுக்கும் இரத்த பரிசோதனை, ஈசி ஜி, ஸ்கேன் என்று எடுக்க சொல்லி அப்பாவி ஏழை மக்களின் உழைப்பை, இரத்தத்தை உருஞ்சும் இரத்த காட்டேறிகள்தான் இந்த படித்த கொலைகார டாக்டர்கள். இந்த நிஜ டாக்டர்களை விட முறைப்படி படிக்காவிட்டாலும் மருந்துக்களை பற்றி தெரிந்து கொண்டு குறைந்த பணத்தை வாங்கி கொண்டு மக்களுக்கு மருத்துவம் செய்யும் படிக்காத டாக்டர்கள் எவ்வளவோ தேவலை.

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு 
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு.
ரௌத்திரம் பழகு
...யாழினி...