Mar 31, 2012

அரசு பயங்கரவாதம்! வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!

April 01: காஷ்மீரில் அமுலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை உடனே ரத்து செய்யவேண்டும் என்று ஐக்கியநாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் கடுமையானது வெறுக்கத்தக்கது என்றும் இது போன்ற கடுமையான சட்டங்கள் சர்வதேச விதிமுறை களுக்கு முரணானது என்றும் இந்தியாவில் நீதிக்கு புறம்பான படுகொலைகள் நடந்து வருகின்றன என்றும் காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறகள் நடக்கின்றன என்றும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி ஹைனெஸ் கூறியுள்ளார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் : இருக்கிற சட்டங்கள் வைத்து கொண்டே இந்திய போலீஸ் மற்றும் ராணுவம் என்கவுண்டர், போலி மோதல்கள், தீவிரவாதிகள் ஊடுருவல் என்று சொல்லி இந்திய மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வருகின்றன. இது போதாது என்று ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வேறு. இந்த சட்டத்தை பயன்படுத்தி இந்திய ராணுவம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் காஷ்மீர் மக்களை வேட்டையாடினார்கள் என்று பார்ப்போம்.

தீவிரவாத பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் ‘தேசபக்த’ இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல் மூலம்  சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

இதுவரை பல்லாயிரம் பேர் ‘காணாமல் போயுள்ளனர்’. ஆனால், மாநில அரசாங்கமோ 3744 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும், 1990லிருந்து அவர்கள் பாகிஸ்தானில் தங்கி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுத் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்து கணவரையும் புதல்வர்களையும் உறவினர்களையும் பறிகொடுத்த காஷ்மீரிகள் “காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்க’’த்தின் மூலம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, அம்மாநிலத்தின் மனித உரிமை கமிசன் தனது புலனாய்வுப் பிரிவைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், அடையாளம் தெரியாதவர்கள் என்று புதைக்கப்பட்ட கல்லறைகளில் 574ஐத் தோண்டிப் பிணங்களைச் சோதித்தபோது, அனைவரும் காஷ்மீரின் உள்ளூர்வாசிகள் என்று இப்போது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 1989 முதல் 2009 வரையிலான காலத்தில் 70,000 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தை ஆக்கிரமித்துள்ள 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மற்றும் துணை இராணுப்படைகள் கண்மூடித்தனமாக இப்படுகொலைகளை நடத்தியுள்ளன. தீவிரவாதிகளைக் கொன்றொழித்தால் பரிசுகளும் பதவி உயர்வும் இந்திய அரசால் அளிக்கப்படுவதால் போட்டிபோட்டுக் கொண்டு மோதல் என்ற பெயரில் உதிரத்தையே உறைய வைக்கும் படுகொலைகளும், போலீசு கொட்டடிக் கொலைகளும் கேள்விமுறையின்றி நடத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத்தின் அரசு பயங்கரவாத இனப்படுகொலை அம்பலமானதைத் தொடர்ந்து, அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகமும் (ஆம்னஸ்டி), அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மனித உரிமைக் அமைப்புகளும் மாநிலம் முழுவதுமுள்ள அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அக்கல்லறைகளும் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டு, மரபணுவியல் தடயவியல் நிபுணர்கள் மூலம் சிதைந்த எலும்புகளைக் கொண்டு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. மனித உரிமைகள் கமிசனிடம் சாட்சியமளித்தவர்களுக்கும், மனித உரிமை இயக்கச் செயல்வீரர்களுக்கும், கமிசனின் புலனாய்வுப் பிரிவினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்; காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான நீதியான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவர்களும் சந்தேகப்படுபவர்களும் அனைத்துலக நீதிமன்றத் தரத்தின்படி விசாரிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியுள்ளன.
அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல். 

3 comments:

Seeni said...

ada Paavikalaaa...?

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் காஷ்மீர் மக்களின் மீதும் தமிழக மக்கள் மீதும் உண்டாவட்டுமாக......இந்தியாவின் கதவு [ நுழைவு வாயில் ] என்றளைக்கப்படும் காஷ்மீரில் வாழும் மக்களை கொன்று இந்தியாவை பாதுகாக்கும் மிருகங்கள் ...,,, சொந்தநாட்டு மக்களை கொன்றுகுவிக்கும் கழுசடை ராணுவம்..,,ஆயுதம் கையில் இருக்கின்றது என்ற திமிர்த்தனம் அப்பாவிகள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்....பொட்டைப்பயல்களை [ இந்திய இராணுவம் என்று சொல்வது தவறு ] அப்பாவிமக்களை கொன்ற தீவிரவாத இந்திய ராணுவத்தினரை கண்டறிந்து கொலை செய்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியாக இருக்கும் அது அல்லாமல் நஷ்ட இடு கொடுத்தால் திரும்பத் திரும்ப கொலை கொள்ளைகளை இராணுவத்தினர் நடத்திக்கொண்டுதான் இருப்பார்கள்..,,,, பாதிக்கப்பட்டவனின் வலியை நாமும் படும்போதுதான் அதன் ஆத்திரம் புரியும் ..,,,பல காலமாக காஷ்மீர் மக்கள் துன்பத்தை சுவைத்துக் கொண்டிருக்கின்றனர் [ தமிழக மக்கள் துன்பத்தை சுவைக்கப்போகின்றோம் என்பது கூட தெரியாமல் சுயநலமாய் வாழ்கின்றோம்...நாளை அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்படும் தமிழனின் ரத்தத்தில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று வட இந்திக்காரன் சொல்லுவான் தமிழர்கள் ௬ட்டம் ௬ட்டமாக காணாமல் போவார்கள் அப்போதுதான் உணரப்போகின்றோம்....,, சிந்திப்போம் மனிதயினம் காப்போம்.....இவன்...புனிதப்போராளி

தமிழ் மாறன் said...

Very good article .... Thank u bro.