Jul 5, 2011

சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்திய அமிதாப் மீது வழக்கு!

ஜூலை ௦6, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனியார் தொலைக் காட்சியில் குரோர்பதி 4 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.

இதற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரங்களில், இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாக முகேஷ் சர்மா என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அமிதாப்பச்சனும், தொலைக்காட்சி நிறுவனமும் வருகிற 28-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்

சிந்திக்கவும்: இவர்களுடைய பணத்தாசைக்கு பெற்ற தாயை வேண்டுமானாலும் விற்ப்பார்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! அதுபோல்தான் கலை கூத்தாடிகளுக்கு எங்கே தெரியபோகிறது சுபாஷ் சந்திர போஸின் அருமை பெருமைகள்.

அவர் இல்லையேல் இந்த சுதந்திரம் ஏது? காந்தியால் கிடைத்ததில்லை இந்த சுதந்திரம்! சுபாஷ் சந்திர போஸின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் நாம் கொண்டிருக்கும் சுதந்திர இந்தியா! அந்த வீர தளபதியை நினைவு கூறுவது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.
-யாழினி-

4 comments:

Robin said...

//அவர் இல்லையேல் இந்த சுதந்திரம் ஏது? காந்தியால் கிடைத்ததில்லை இந்த சுதந்திரம்! சுபாஷ் சந்திர போஸின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் நாம் கொண்டிருக்கும் சுதந்திர இந்தியா!// அப்படியா? புதிய தகவல், நன்றி!

Anonymous said...

கலைக்கூத்தாடிகளை பச்சன்களுடன் சேர்த்து கேவலப்படுத்தவேண்டாம். தங்களின் உயிரைப் பணயம் வைத்து கால் வயிற்றுக்கஞ்சிக்காக அவர்கள் செய்யும் சாகசங்களில் இந்தியாவின் உயிர்ப்பு உள்ளது.

பச்சன்கள் ஸ்டன்ட் மாஸ்டர்களை வைத்து கூத்தடிக்கிறார்கள். நம் தேசத்தின் அக்மார்க் முத்திரைகளான கழைக்கூத்தாடிகள் எங்கே? டூப் பச்சன்கள் எங்கே?

- நன்றி தமீம்.

PUTHIYATHENRAL said...

நன்றி ராபின் தொடர்ந்து வருகைதாருங்கள் கருத்துக்கள் சொல்லுங்கள்! உங்கள் ஆதரவுக்கு நன்றி!

PUTHIYATHENRAL said...

மன்னிக்கவும்! கலை கூத்தாடிகள் என்று அதில் நாங்கள் குறிப்பிடுவது சினிமா நடிகர்களை மட்டும்தான். மற்ற கலைத்துறையை சேர்ந்தவர்களை இல்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.