Jul 4, 2011

தமிழர்களை கொல்லும் இந்திய ராணுவம்! பழ.நெடுமாறன்!

JULY 05, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற சிறுவர்கள் மீது படை வீரர் ஒருவர் சுட்டதின் காரணமாக தில்ஷான் என்ற சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான்.

இதைக் கண்டு தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து சுட்டுக் கொல்கிறது. இப்போது இந்திய ராணுவமும் நமது நாட்டு மக்களையே சுட்டுக் கொல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட படை வீரர் மீது கொலைக்குற்றத்திற்கசான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments: