JULY 03, கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அயன் கரிசல்குளத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று கோரி கிராமமக்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் மார்ச் 15 அன்று பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.
மேலும், ஜூன் 30க்குள் கடையை மாற்றித்தருவதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் உறுதியளித்தபடி கடை மாற்றப்படவில்லை. எனவே, நாளை மறுநாள் (ஜூலை 4) அயன் கரிசல்குளம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அயன் கரிசல்குளத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று கோரி கிராமமக்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் மார்ச் 15 அன்று பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.
மேலும், ஜூன் 30க்குள் கடையை மாற்றித்தருவதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் உறுதியளித்தபடி கடை மாற்றப்படவில்லை. எனவே, நாளை மறுநாள் (ஜூலை 4) அயன் கரிசல்குளம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment