May 24, 2011

ராஜீவ் காந்தி கொலைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்!! கே.பி.

May 25, பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதற்காக நேரு குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கேறேன் என்று விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான கே.பி. என்ற குமரான் பத்பநாபன் கூறியுள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிதி, மற்றும் ஆயுத சேகரிப்பில் வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வந்த கே.பி. என்ற குமரான் பத்பநாபன் CNN, IBL தொலைகாட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது ராஜீவ் காந்தியை கொலை செய்ய நாங்கள் முன்னமே திட்டமிட்டிருந்தோம். இதை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் போட்டு அம்மன் இருவரும் திட்டமிட்டனர்.

இதுவே பிரபாகரன் செய்த மிகபெரிய தவறு என்றும் இந்த தவறுக்காக வேண்டி புலிகள் சார்பில் நான் நேருவின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் திமுகவின் பிராமண எதிர்ப்பு கொள்கையும் ராஜீவ் காந்தியின் கொலைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் நாங்கள் அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதாவை பலமுறை கொலை செய்ய முயற்ச்சித்தோம் என்றும் அதற்க்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது இந்த படுகொலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்பிருப்பதாகவும், மேலும் தன்னை கொல்ல சதி நடப்பதாகவும் அதிமுக தலைவர் ஜெயலலிதா கூறியது நினைவு கூறதக்கது.

சிந்திக்கவும்: குமரன் பத்மநாபனின் இந்த தொலைக்காட்சி பேட்டியை பார்க்கும் போது ஒன்று துளிவாக தெரிகிறது, காங்கிரஸ் திமுகவுடன் கொண்டுள்ள கூட்டணியை முறிக்கவும், அதிமுகவுடன் கூட்டு சேரவும் செய்யப்பட்ட திட்டம் என்றே எண்ணத்தோன்றுகிறது.

மேலும் இலங்கை அரசின் மீது உள்ள போர்குற்ற பழியை திசைதிருப்ப இந்த விஷயம் இப்போது கிளப்பாப்படுள்ளதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

No comments: