Mar 6, 2011

சிங்கபூர் ராணுவ கேப்டனாக இந்தியர் தேர்வு!!

சிங்கப்பூர்,மார்ச்.6:சிங்கப்பூரில் சீக்கிய மதத்தைச் சார்ந்த பிரிகேடியர் ஜெனரல் ரவீந்தர் சிங் அந்நாட்டின் புதிய ராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதன்முதலாக சிங்கப்பூரில் ஒரு சீக்கியருக்கு ராணுவத்தின் உயர்பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 41 வயதான ரவீந்தர் சிங் தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் சான்சூனிடமிருந்து இம்மாதம் 25-ஆம் தேதி பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

1982-ஆம் ஆண்டு சிங்கப்பூர் ராணுவத்தில் சேர்ந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரவீந்தர் சிங் தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

2 comments:

Anonymous said...

its not ranuva captain ,its army genaral

ADMIN said...

நல்ல சேதி தான் சொல்லியிருக்கீங்க..