Mar 29, 2011

224 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு!! எஸ்.டி.பி.ஐ. !!

மார்ச் 30, சென்னை: சோசியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடாத மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில் கூறியிருப்பதாவது; “தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகள் போக எஞ்சியுள்ள தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும்.

சேப்பாக்கம் மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அறந்தாங்கி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ. தனது ஆதரவை தெரிவிக்கிறது” என்றார்.

மேலும் எஸ்.டி.பி.ஐ. ஆதரிக்கும் இக்கட்சியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுமாறு பொதுமக்களுக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: