
சிந்திக்கவும்: மதுரையில் கலவத்தை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சதித்திட்டம் தீட்டுகிறதோ? என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படித்தான் செய்வார்கள். விநாயகர் சதுர்த்தியின் போது ஊர்வலத்தை கொண்டு போக பல வழிகள் இருந்தாலும் அதை முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் வழியாகத்தான் கொண்டு போவேன் என்று அடம் பிடிப்பார்கள். ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால்? அது என்ன பாகிஸ்தானா? என்று கேள்வி கேட்பார்கள். ஹிந்துக்களுக்கு இந்தியாவில் உரிமை இல்லையா? என்று கூக்குரல் இடுவார்கள். இவர்கள் விநாயகர் சதுர்த்தி நடத்துவதிலோ, ஊர்வலமாக போவதிலோ யாருக்கும் எந்த இடையூறும் இல்லை. இவர்கள் இதைவைத்து கலவரம் நடத்த அல்லவா? திட்டமிடுகிறார்கள் என்பதாலேயே இந்த எதிர்ப்பு.
மேலும், இவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிவழியாக அதுவும் மசூதி இருக்கும் வழியாக தான் போவார்கள். வேண்டும் என்றே மசூதி முன்பு நின்று மேளம் அடித்து அவர்கள் தொழுகைக்கு இடையூர் செய்வார்கள். இதுவும் பற்றாது என்று அவர்கள் தொழுகை முடிந்து வெளிவரும் ஏதாவது ஒரு நேரத்தை கவனத்தில் கொண்டு அதுவரை ஊர் வலத்தை தாமதம் செய்வார்கள். அப்படி முஸ்லிம்கள் மசூதியை விட்டு வெளிவரும் போது ஆர்.எஸ்.எஸ். கரசேவை குண்டர்களே விநாயகர் சிலை மீது செருப்பையோ, ஊர்வலத்தின் மீது கல்லையோ வீசிவிட்டு சொல்வார்கள் முஸ்லிம்கள் தாக்கிவிட்டார்கள் என்று. உடனே அந்த பகுதியில் கலவரம் நடக்கும். இதை வைத்து பிரச்சாரம் செய்து அப்பகுதி இலஞ்சர்களை தங்களது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்த வலையில் விழ வைப்பார்கள்.
இவர்கள் திட்டமிட்டு சந்தர்பத்தை பார்த்து உண்டாகிய கலவரத்தில் அப்பாவி ஹிந்து, முஸ்லிம் சகோதரர்கள் பாதிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களுக்கு தெரியும் இது போன்ற கலவரங்கள் நடந்தால் பாதிப்படைய போவது தாங்கள் தான் என்று. அவர்கள் சிறுபான்மை சமூகம். ஹிந்து, முஸ்லிம் கலவரம் நடந்தால் அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கும். இது வெறும் கற்பனை செய்தி இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் நடந்த கலவரங்களை எடுத்துப்பார்த்தால் அதில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் முஸ்லிம்களாகத்தான் இருக்கும். பாதிப்புகள் என்பது உயிர் சேதம், பொருள் சேதம், அதுமட்டும் இல்லாமல் காவல்துறை போட்ட வழக்குகள் என்று, பாதிப்பில் எண்பது சதவீதம் முஸ்லிம்களுக்கே.
அதனாலே முஸ்லிம் இலஞ்சர்களை ஜமாஅத் பெரியவர்கள் தட்டியே வைத்திருப்பார்கள். வீட்டில் உள்ள தாய், தந்தை இவர்களை எந்த அரசியல் மீட்டிங்குளில், போது விசயங்களில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ஏன் என்றால்? எந்த பிரச்சனை வந்தாலும் பாதிப்பு அதிகம் அவர்களுக்கே. என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தவர்கள். அப்படியிருக்க மாட்டு தலையை ஆர்.எஸ்.எஸ். அலுவுலகத்தின் முன்னே போட்டால் என்ன நடக்கும் என்று முஸ்லிம்களுக்கு தெரியும். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இதை வைத்து கலவரம் உண்டாக்குவார்கள் அதை சமாளிக்க நம்மால் முடியாது என்று நான்றாக தெரியும். அப்படி இருக்க இந்த மாட்டு தலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆரம்பித்து இருக்கும் ஒரு கலவர உக்கிதியாகவே இதை நம்மால் பார்க்க முடிகிறது.
இவர்கள் ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு கலவரம் உண்டாக்கும் போது முஸ்லிம்களின் கடைகளை தீ இட்டு கொளுத்துவது, கொள்ளை அடிப்பது போன்ற சமூக விரோத காரியங்களில் இடுபடுவார்கள். இதனால் அதிகமான சேதம் முஸ்லிம்களுக்கே. இது மட்டும் இல்லாமல் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் எவ்வாறு கால் ஊன்றியது என்றால் அதற்க்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த வடநாட்டு சேட்டுகள் தான். இவர்கள் தமிழகத்தில் வந்து தொழில் செய்ய ஆரம்பித்த போது முக்கிய வியாபார துறைகள் எல்லாம் முஸ்லிம்கள் வசம் இருந்தான. இதை பிடிக்க சேட்டுகள் செய்த சதிதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழ் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வரலாறு. இவர்களின் முழு பண உதவில் வளர்க்கப்பட்டது தான் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.
தந்தை பெரியார் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அவரது கடுமையான பிரச்சாரத்தால் இவர்களது வளர்ச்சி தடுக்கபட்டது. கம்னியுஸ்ட் இயக்கத்தினரும் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். அம்பேத்கார் உருவாக்கிய தலித் அமைப்புகள் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் & முஸ்லிம்கள் ஒற்றுமையை பாதுகாத்து வந்தன. ஹிந்துத்துவா தீய சக்திகள் தமிழகத்தில் வளராமல் தடுக்கப்பட இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இருந்தும் இவர்கள் மீண்டும்! மீண்டும் பல்வேறு புதிய சூழ்ச்சிகளை மேற்கொண்டு ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைத்து இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க திட்டமிடுகிறார்கள். அதன் தொடர்ச்சியே இந்த மாட்டு தலை விவகாரம். ஹிந்துக்களே! முஸ்லிம்களே!! உசார்!! உசார்!! உசார்!! ஹிந்துக்களும் முஸ்லிம்களும் என்றும் சகோதரர்களே! இது யாராலும் பிரிக்கமுடியாத பந்தம்.
அன்புடன்: தமிழ் செல்வன்.
நன்றி: தமிழ் செல்வன் ( செய்திகள் மின்னஞ்சல் வழி).
No comments:
Post a Comment