Jan 2, 2011

'மதுவை ஒழிப்போம்;​ தமிழகத்தை காப்போம்' !

திருச்சி,​​ ​ ஜன.​ 2: திருச்சியில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'மதுவை ஒழிப்போம்;​ தமிழகத்தை காப்போம்' என்பதை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,​​ அந்த அமைப்பின் மாநகரத் தலைவர் சைய்யது முகம்மது தலைமை வகித்தார்.அமைப்பின் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.​ ஜலாலுதீன்,​​ குடிபோதை மாற்று சிகிச்சை மையத் திட்ட இயக்குநர் எம்.​ பாரதிமோகன்,​​ பெண்கள் முன்னணி அமைப்பின் கரூர் மாவட்ட நிர்வாகி ஆர்.​ஜானகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது,​​ மதுவுக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன.​ கடந்த 24-ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு,​​ இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஜமா அத்தே இஸ்லாமி நிர்வாகிகள் தெரிவித்தனர்.​

No comments: