Jan 4, 2011

சூரியனுக்கே டார்ச்சா!!! : பயங்கரவாத இலங்கை அரசின் சாதனை.


இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இந்தியா மலேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேங்காயை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் இறங்குவதாக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக சூரியனுக்கே டார்ச்சா!!என தனது கோபத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் தேங்காய் உற்பத்தியில் இலங்கை தன்னிரைவு பெற்றதோடு அல்லாமல், அதை 750 வருடங்களாக உலகளவில் இலங்கை ஏற்றுமதியும் செய்து வந்ததாக குறிப்பிட்ட அவர் தற்போது தேங்காயை கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை தோன்றியது துரதிருஷ்டமானது என்றும் அவர் குறிப்பிட்டார். "இது ஒரு உலக சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இதை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவு செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

No comments: