Jan 29, 2011

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே திருவோம்: அசோக் சிங்கால் கொக்கரிப்பு.

காஞ்சிபுரம், ஜன. 28: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்தார். காஞ்சிபுரம் கும்பாபிஷேக விழாவுக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியது: கடந்த சில மாதங்களுக்கு முன், கோவாவில் நடைபெற்ற இந்து சமய மாநாட்டில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.

சிந்திக்க :இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி கொண்டு போகாமல் விட மாட்டார்கள் போல. இப்படித்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் என்று பிரிந்து போக காரணமாக இருந்தார்கள். இப்ப பாபர் மசூதி அதை தொடர்ந்து காசி, மதுரா மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 2500 மசூதிகளை உடைப்போம் என்று சொல்லி இன்னும் எத்தனை கலவரங்களை நடத்த போகிறார்களோ இந்த பாசிச ஹிந்துவா பயங்கரவாதிகள். நினைத்தாலே மிகவும் பயமாக இருக்கு.

No comments: