![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiyG_juVSbDD4jL6Vn9KX0Hq9pcGjYHEy61SKpwY-QC_xwua3iXLp5mtZvh29yawCjYM8FkFqWoGmjA7_yNdbYq6T2hU7efZwufSAm9xjCXNLKZIPZPQiPTFT02ZWSL22YxmHfwuiPjpg/s320/zrclip_006n2cac2ef4.png)
ஜம்மு,ஜன.18:திருட்டு குற்றத்தில் கைதுச் செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் வைத்து மரணமடைந்ததைத் தொடர்ந்து காவல்நிலைய பொறுப்புக்குரிய அதிகாரிகள் மீது மாஜிஸ்ட்ரே விசாரணைக்கு ஜம்மு கஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி திருட்டு குற்றத்தில் கைதுச் செய்யப்பட்ட விஜய்குமார்(வயது 30) என்பவர் போலீஸ் காவலில் வைத்து மர்மமான முறையில் நேற்று முன்தினம் மரணித்தார்.
சிந்திக்கவும் :காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஈழ தமிழர்கள் விஷயம் முதல் காட்டுவேட்டை வரை இந்திய அரசும் அதன் கருவிகளும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. உலகில் மனித உரிமைகள் அதிகம் மீறப்படும் நாடுகளின் வரிசையில் சீக்கிரம் முதலிடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய காவல் துறை போல் ஒரு இதயம் அழுகிய காவல் துறையை உலகில் எங்கும் பார்க்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்பொது அவர்களுக்கு துணையாக நீதி துறையும், சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment