Oct 29, 2011

மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இந்தியா?

OCT 30: அருணாச்சாலப்பிரதேசத்தில் பாலம் அறுந்து விழுந்ததில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷெப்பா என்ற இடத்தில் கெமங் ஆற்றின் மீது இருந்து தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. பாலம் அறுந்து விழுந்ததில் நடந்து சென்ற அனைவரும் ஆற்றின் நீரில் மூழ்கினர். இருவர் மட்டும் நீந்தி உயிர் தப்பியுள்ளனர்.

சிந்திக்கவும்: இதுமாதிரி கொடுமைகள் எல்லாம் இந்தியாவில்தான் நடக்கும். பாதுகாப்பில்லாத பாலங்கள், பாதுகாப்பில்லாத படகுபயணம், ரயில்களில் போதிய பாதுகாப்பு இல்லாமை, வாகனங்கள் குறித்த ஒரு தரக்கட்டுபாடு இல்லாமை இப்படி விபத்துகளுக்கு உண்டான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்திய அரசு அதிகாரிகள் லஞ்சத்தை வாங்கிகொண்டு தரம் இல்லாத விசயங்களுக்கு அனுமதி கொடுப்பதன் விளைவு, கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீ விபத்து முதல் தொடங்கி சுற்றுலா படகுகள் கவிழ்வது வரை அன்றாடம் விபத்துக்கள் மூலம் நடக்கும் கோர மரணங்கள் அதிகரித்து கொண்டே சொல்கிறது.

இந்திய அரசு "இந்தியாவை முன்னேற்ற போகிறோம்" என்று சொல்லி கூடங்குளம் அனுமிநிலயம் முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரை எத்தனயோ பாதுகாப்பில்லாத விடயங்களை கொண்டுவருகிறது. ஒரு சாதாரண உபயோகம் இல்லாத பாலத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதே தெரியாத இவர்கள் எப்படி அனுமிநிலயத்தை பாதுகாக்க போகிறார்களோ.

இதை பார்க்கும் போது போபால் விசவாய்வு கசிவே நினைவுக்கு வருகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நஷ்டஈடு கொடுக்க முடியவில்லை. எங்கோ பலம் விழுந்தது ஐம்பது பேர் செத்தார்கள் என்று மவுனம் காக்காமல் இதற்காக மொத்த நாடும் கொந்தளித்து எழவேண்டும். மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத எந்த முன்னேற்ற திட்டங்களையும் அரசு கொண்டுவருவதை அனுமதிக்க கூடாது.

எல்லா நலத்திட்டங்களும் மக்களின் அடிப்படை வசதிகளை  பெருக்குவதற்க்காகவே அல்லாமல் மக்களின் பாதுகாப்பை கேள்விகுறி ஆக்குவதற்காக அல்ல. இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரளவேண்டும். இதுபோல் சக மக்களுக்கு பதிப்புகள் ஏற்ப்படும் போது மொத்த நாடே கொந்தளிக்க வேண்டும். ஒரு அன்னா கசாரேயின் போராட்டத்திற்கு பணியும் அரசு நாடே கொந்தளிக்கும்போது பணியாதா என்ன? மக்கள் சிந்திப்பார்களா? விழிப்புணர்வு கொள்வார்களா?

நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

6 comments:

Anonymous said...

ரொம்ப சரியா சொன்னீங்க.

இவ்வளவு பேர் இத்தனை மாதிரி சாகிறார்கள். ஆனால், நம்ம இஸ்லாமிய போராளிகள் ரயிலில் பஸ்ஸில் கோவிலில் குண்டு வைத்தால் மட்டும் குய்யோ முய்யோன்னு கத்துகிறார்கள்.

நல்லா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேளுங்க

Anonymous said...

சரியா சொன்னீங்கள்

இவ்வளவு பேர் இப்படி வேஸ்ட்டா சாகிறார்கள். நம்ம ஹிந்துத்துவா போராளிகள், ஆர். எஸ்.எஸ். தேசபக்தர்கள் இந்தியா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினால், ரயிலில் பஸ்ஸில், ஹைதராபாத் மக்கா மசூதி இப்படி குண்டை வைத்தால், பாபர் மசூதியை இடித்து கலவரம் நடத்தினால், ரதயாத்திரை நடத்தி முஸ்லிம்களை கொன்றால், மும்பை கலவரம், வாரணாசி, பாகல்பூர், பீவாண்டி, கோவை, மீரட், குஜராத் என்று கலவரம் நடத்தி முஸ்லிம்களை கொன்றால் குய்யோ முய்யோன்னு கத்துகிறார்கள்.

நல்லா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேளுங்க..... நன்றி அநோநோநிமிஸ் சார்.

உங்கள் : ஓம்காளி ஜெய் காளி. பாரத் மாதாகீ ஜெய்.

Anonymous said...

என்ன சார் இந்தியா ஒளிருது, நாங்கள் காட்டு வேட்டை ஆடுறோம், காஷ்மீர் வேட்டை ஆடுறோம், தமிழக மீனவர்களை இலங்கை கடல்படை சுட்டு விளையாட மகிழ ஏற்பாடு செய்றோம், எங்கள் அன்னா ஹசாரே, போன்ற தலைவர்கள் எங்கள் ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்கள் புடைசூழ இந்தியாவையே ஒளிர வைக்கிறோம் நீங்கள் என்ன வென்றால் ஒரே மட்டம் தட்டிகிட்டு, வேலையே பாருங்கள் சார். உங்களுக்கு வேற வேலையே இல்லையா.

by- mannar mannan. nellai.

Anonymous said...

என்ன ஓம் காளி, ஜெய்காளி, பாரதமாதா கீ ஜெய் சார் வசதியா முஸ்லிம்கள் மட்டும் கொல்லப்படுவதை சொல்லி நிறுத்தி விட்டீர்கள். ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா தேசபக்தர்கள் ஒரிசாவில் ஆஸ்த்தேரிலியா பாதிரியார் கிரஹாம் ஸ்டேன்ஸ் மற்றும் அவர் பட்சிலம் குழந்தைகள் இருவரையும் வாகனத்தோடு எரித்து கொன்றார்களே, ஒரிசாவில் பாதிரி பெண்களை கற்பழித்து கொன்றார்களே, ஒரு கிராமத்தையே கலவரம் நடத்தி சூறையாடினார்களே, இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்கி வருகிறார்களே இந்த ஆர்.எஸ்.எஸ். தேச பக்தர்கள் அதை பற்றி மட்டும் சொல்லாமல் விட்டு விட்டுடீங்களே! இது சரியா சார். சொல்லும் பொது முழுமையா சொலுங்கள். சொல்வதை தெளிவா, விளக்கமா சொல்லுங்கள்!

ராபர்ட். மணப்பாடு. துத்துக்குடி மாவட்டம்.

tamilan said...

CLICK AND READ THE LINK

>>>>
குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.
<<<<

.

Anonymous said...

மனித நேயமா அது எந்த கடையில் கிடைக்கும் என்று இந்தியா கேட்ட்க்கும். அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் சொந்த மக்களையே கொல்வார்கள் அப்படி இருக்க இதுபோல விபத்தில் யார் செத்த அவர்களுக்கு என்ன?

...... muran......