பீஜிங், ஜன.18- கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 15 லட்சம் டாலர்கள் நிவாரண உதவி வழங்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. இத்தகவலை சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ, பீஜிங் நகரில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சீன அரசு சார்பில் 15 லட்சம் டாலர் தொகைக்கான நிவாரணப் பொருட்களும், சீன செஞ்சிலுவை சங்கம் ரொக்கமாக 30 ஆயிரம் டாலர்களும் வழங்கும் என்று அவர் கூறினார்.இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாம்கட்ட உதவியாக 10 லட்சம் டாலர்கள் தொகைக்கான நிவாரணப் பொருட்கள் நேற்று இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்: கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீவிபத்தில் மரணித்த சோகம் நடந்த பொது அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நமது நடிகர்கள் ஆளாளுக்கு பல இலட்சம் நிவாரண தொகைகளை அறிவித்தார்கள். அதில் பலர் அதை கடைசிவரை கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என்பதுதான் பொது மக்களின் பணத்தில் தங்களை வளர்த்து கொண்ட இவர்களின் சேவை மனப்பான்மைதான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment