Jan 1, 2011

கொழும்பில் 100 கோடி ரூபா வெளிநாட்டு நாணயம் மோசடி.

கொழும்பில், பதிவுசெய்யப்படாத நிறுவனம் ஒன்றின் பேரில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து சுமார் 100 கோடி ரூபா வெளிநாட்டு நாணய மோசடியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் வங்கி முகாமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைத்து பதிவுசெய்யப்படாத நிறுவனத்தின் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து 100 கோடி ரூபா வெளிநாட்டு நாணய மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து ஆடை வகைகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று வருவதாக சந்தேக நபர்களால் எமக்கு கூறப்பட்டது. எனினும் அத்தகைய ஒரு கப்பல் வருவதாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. இச்சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வங்கியை நாம் நேற்று சோதனைக்கு உட்படுத்தியதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டோம். அந்த விசாரணையின் போது இவர்கள் இவ்வாறான மோசடிகளில் கடந்த 8 மாதங்களாக மேற்கொண்டு வருவதாக தெயவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

No comments: