![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPML1OoKRe5kk31F0L9FAc_av_SXOtWopH1N106Od-V7AXRq1zQJtDKbvHMSDRkLxUdNaa9eMTsizeIg7ubaHnQCYoCzEGTI80RCXBPNr8TPnEhcrmdB5mHl0wZmY913Q4LPsqmLypALk/s320/imagesCA3S0I10.jpg)
பொதுவாக காபியுடன் சர்க்கரை சேர்க்க கூடாது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் என கூறுவது உண்டு. ஆனால் காபியுடன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதன்மூலம் ஞாபகசக்தி அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், காபியில் உள்ள “காபைன்” என்ற பொருளுடன் சர்க்கரை சேர்க்கப் படும்போது மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதன்மூலம் ஞாபகசக்தி கூடுதலாகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு 40 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. முதலில் அவர்களுக்கு காபி மட்டும் கொடுக்கப்பட்டது. பின்னர் காபியுடன் சர்க்கரையும் சேர்த்து வழங்கப்பட்டது. இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் காபியுடன் சர்க்கரை சேர்க்கப்படும் பட்சத்தில் ஞாபகசக்தி அதிகரிப்பது தெரியவந்துள்ளது
No comments:
Post a Comment