Jun 7, 2010

எங்கள் இனம் இந்தியமோ,திராவிடமோ அல்ல தமிழினமே! தமிழர்களுக்கு “நாம் தமிழர்” இயக்கத் தலைவர் சீமான் கோரிக்கை – சிறப்பு பேட்டி!

“இந்தியன் என்று ஒரு இனம் இல்லை. நாம் அனைவரும் இந்தியாவின் நிலப்பரப்பில் வாழும் குடிகள் மட்டுமே.அதைப்போல நாம் திராவிடரும் இல்லை. ஆரியம் என்ற சொல்லுக்கு எதிரான சொல்லாடலாக திராவிடம் என்ற சொல்லை வரலாற்றாசிரியன் கால்டுவெல் பயன்படுத்தினார் அவ்வளவே. திராவிடர் என்றால் யார்? அப்படி ஒரு இனம் இருக்கின்றதா? அதற்கு மொழி இருக்கின்றதா? மலையாளியும் தெலுங்கனும் கன்னடனும் தங்களை திராவிடர் என சொல்லிக்கொள்வதில்லை. ஆனால், தமிழன் மட்டும்தான் திராவிடர் என்று சொல்லிக்கொள்கிறான்.

இந்தியன்,திராவிடன் என்று ஒரு இனமும் இல்லை. தமிழன் என்ற இனம் மட்டுமே உண்டு. நாம் அனைவரும் தமிழர்கள். உலகின் தொன்மையான குடி. ஆகவே நாம் நமது உரிமைகளைக் கோரிப்பெறுவதற்கும் நாம் இனத்தால் ஒன்றுபடுவதற்கும் நம்மை தமிழர்கள் என்று உணார்தல் அவசியம். ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது தமிழர்கள் தம்மைத் தமிழர்கள் என்று உறுதியாகப்பதிவு செய்ய வெண்டும்” என்றார்.

2 comments:

Anonymous said...

S.M.Mazahim from Sri Lanka
ஏன் இந்த தகவல் இங்கு வரவேண்டும் மொழி என்பது இயற்கை தொடர்பாடல் ஊடகம் இதை வைத்து பிளவுகளுக்கு வழிசெய்யக்கூடாது நாம் கொள்கை வாதிகள் முஸ்லிம்கள் ஒரு கோட்பாட்டை கொண்ட உயர்ந்த இஸ்லாமியர்கள் என்பதைத்தான் எமது பிரதான அடையாளமாக கொள்ளவேண்டும் அப்போதுதான் உலகளாவிய முஸ்லிம் உம்மாஹ்வின் அசைக்க முடியாத அங்கமாக நாம் மாறமுடியும்

PUTHIYATHENRAL said...

நீங்கள் சொல்வது சரிதான் இதில் நமக்கும் உடன்பாடு இல்லை. இதை ஒரு செய்தியாக போட்டுள்ளோம் அவ்வளவுதான். மற்றபடி இந்த கூற்றில் நமக்கு உடன்பாடு இல்லை.