Apr 16, 2010

மாவோயிஸ்டுகளை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள்? இந்திய அரசு தீவிரவாதிகள் திட்டம்.

ராய்பூர், ஏப்.16- மாவோயிஸ்டுகள் வசிக்கும் காட்டுப் பகுதிகளில் சிறிய ரக ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்த சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. எனினும், பாதுகாப்பு படையினர் 10 கிலோ எடையுள்ள இந்த நவீன ரக ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. சமீபத்தில், சத்தீஸ்கரில் உள்ள தாண்டேவாடா என்னுமிடத்தில் மாவோயிஸ்டு போராளிகள் நடத்திய தாக்குதலில் 76 போலீஸôர் உயிரிழந்தனர்.

No comments: