Apr 13, 2010

முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அரசு நடத்தும் பயங்கரவாததிற்கு இதுவும் ஒரு சாட்சி.

ஸ்ரீநகர்:இரண்டு வார விடுமுறையை குதூகலமாகக் கொண்டாட டெல்லியை நோக்கிச் செல்லும் பொழுது அந்த 15 வயது மக்பூல்ஷா ஒருபோதும் கருதியிருக்கமாட்டார் இனி 14 ஆண்டுகளுக்கு பின்னரே தனது குடும்பத்தினரை காண இயலும் என்று.1996 ஆம் ஆண்டு லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட மக்பூலை கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலைச்செய்தது.

ஆனால், சிறை வாழ்வின் போது இழந்த தனது தந்தை மற்றும் சகோதரியின் பிரிவால் மக்பூலுக்கு சிறை விடுதலையின் மகிழ்ச்சியை பூரணமாக அடையமுடியவில்லை. ஸ்ரீநகரில் உள்ள லால்பஸாரில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்ற மக்பூல் நேராகச் சென்றது தனது தந்தை மற்றும் சகோதரியின் கப்றுஸ்தான்களுக்கு. இருவருடைய கப்றுகளையும் கட்டி அனைத்து கண்ணீர் விட்டு அழுதார் மக்பூல்.

No comments: