ஹைதராபாத்:ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு காரணம் சங்க்பரிவாரின் சதித்திட்டமே என உண்மைக் கண்டறியும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஹைதராபாத் கலவரம் ஹிந்து-முஸ்லிம் கலவரம் அல்ல எனவும், அரசியல் தூண்டுதல் உள்ளதாகவும், தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிறகு தயார் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.
சிவில் லிபர்டீஸ் மானிட்டரிங் கமிட்டி, குல நிர்மூலன போராட்ட சமிதி, பேட்ரியாடிக் டெமோக்ரேடிக் மூவ்மெண்ட்,சைதன்ய சமைக்யா உள்ளிட்ட அமைப்புகளின் ஒன்பது பேரைக் கொண்ட உண்மை கண்டறியும் குழுதான் ஹைதராபாத் கலவரத்தைக் குறித்து விசாரணை மேற்கொண்டது.மீலாதுநபி கொண்டாட்டத்தின் பொழுது கட்டப்பட்டிருந்த பச்சை நிறக்கொடிகளை மாற்றிவிட்டு காவிக் கொடிகளை கட்டமுயன்ற பா.ஜ.கவினரின் செயல்தான் கலவரத்திற்கு காரணமாக அமைந்தது.
ஹிந்து-முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வாழும் மதண்ணபேட் பகுதியில் மார்ச் 23 ஆம் தேதி மாலையில்தான் இச்சம்பவம் நடந்தது. பச்சை நிறக்கொடிகளை மாற்றுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் அவகாசம் கோரியபொழுதும் அதனை பொருட்படுத்தாமல் கும்பலாக வந்த சங்க்பரிவார்கள் காவிக் கொடிகளை கட்ட ஆரம்பித்தனர்.பா.ஜ.கவின் மாநகராட்சி உறுப்பினர் சஹதேவ் யாதவின் தலைமையில்தான் இது நடந்தது. இரவு பத்தரை மணிக்கு கும்பலாக வந்த சங்க்பரிவார வன்முறையாளர்கள் மஸ்ஜிதுகளையும், வீடுகளையும், கடைகளையும் தாக்கி சேதப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து உருவான கலவரம் இதர பிரதேசங்களுக்கும் பரவியது.
வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்துவாஹினி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் வலுவாக இருக்கும் பகுதிதான் மதண்ணபேட். வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களை பயன்படுத்தித்தான் தாக்குதலை நடத்தியுள்ளனர் சங்க்பரிவார்கள். தாக்குதலில் 68 மஸ்ஜிதுகள் மற்றும் தர்காக்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தகர்க்கப்பட்டுள்ளன. மூன்று கோயில்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment