Feb 2, 2010

தேர்தல் முடிந்தும் வன்முறை ஒயவில்லை - இலங்கை நிலை குறித்து அம்னெஸ்டி கவலை.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்ததையடுத்து, நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையில் அரசியல் அடக்குமுறைகள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆயினும் அதற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் மோசமான முறையில் நெருக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் மது மல்ஹோத்ரா அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

தேர்தலுக்குப் பின்னர், எதிரணி ஆதரவாளர்கள், செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், முன்னணி பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள், தொழிற்சங்கவாதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேசனல் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

No comments: