அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வாஷிங்டனில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
தலாய் லாமாவை ஒரு ஆபத்தான பிரிவினைவாதி என்று வர்ணித்துள்ள சீனா, இந்த சந்திப்பு அமெரிக்க-சீன இரு தரப்பு உறவுகளை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது. ஆனால் தலாய் லாமா திபெத்தியர்களின் உரிமைகளை ஆதரிக்கும் ஒரு முக்கிய உலகத் தலைவர் என்று அமெரிக்க நிர்வாகம் கூறியுள்ளது.
இணைய தளத்தை தணிக்கை செய்வது, தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment