Dec 30, 2009

பொய் சொல்வதில் பெரும்பாலோர் உயர் கல்வி கற்றவர்கள் தான்

கல்வி மனிதனை கலாச்சாரமுடைய சத்திய சீலனாக மாற்றுகிறது என்று நீங்கள் கருதினால் அது தவறு என்று நிரூபிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.பொய் கூறுபவர்களில் பெரும்பாலோர் உயர்ந்த கல்வி கற்றவர்கள் தான் என்று உள அறிவியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா கலிஃபோர்னியா,வெர்ஜீனிய,மாநில பல்கலைக்கழகங்கள் மேற்க்கொண்ட இத்தகைய வித்தியாசமான உள அறிவியல் ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. உயர் கல்வியை கற்றவர்கள் பொய்யைக்கூறுவதில் நிபுணத்துவம் பெற்றவராக விளங்குவதோடு பிறர் கூறும் பொய்யையும் எளிதில் கண்டறிந்துவிடுகின்றனர் என்பதுதான் இவ்வாய்வில் கிடைத்துள்ள ருசிகரமான உண்மை.

No comments: