Oct 5, 2009

அன்னாசிபூ


இலிசியம் வீரம் என்ற தாவிரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை சிறந்த கிருமிநாசினி. இது வைரஸ், புளு வைரஸ் போன்ற நுண் கிருமிகளை பரவாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில் அன்னாசிபூ அல்லது தக்கோலம் என்ற பெயரில் கிடைக்கும்.

சுவாசப்பாதையில் எற்படும் நுண்கிருமி தொற்று மற்றும் கழிச்சல் நீங்க அன்னாசிபூவை பொடித்து அரை முதல் ஒருகிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து உட்கொள்ள சுவாசாபாதையில் எற்பட்ட தொல்லைகள் தீரும்.

அன்னாசிபூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி. நீரில்போட்டு கொதிக்க வைத்து 100மி.லி. யாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு முன் குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசிபூவை பொடி செய்து அரை முதல் 1 கிராம் அளவு பொடியை சூடான பாலில் அல்லது
சூடான நீரில் கலந்து சாப்பிட்டு வர தோற்று காச்சலினால் தோன்றும் தொண்டைக்கட்டு, இருமல் மற்றும் தொண்டைவலி நீங்கும். சளி நன்கு வெளியேறும், செரிமான கோளாறுகளை நீக்குவதுடன் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றி பசியை உண்டாக்கும் தன்மை உடையதால் அன்னாசிபூ பிரியாணி போன்ற செரிக்க கடினமான உணவுகள் தயார் செய்யும்போது மசாலாவாக சேர்க்கப்படுகிறது

2 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல கட்டுரை.பிரியாணி சாப்பிட்டதுபோல் உள்ளது.ஏவ்!!!

Unknown said...

வருக....

தொடர்ந்து எழுதுங்கள்; உங்கள் எழுத்து முறை நன்றகாக உள்ளது!

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!

www.adiraipost.blogspot.com