Nov 18, 2015

கனமழை தந்த படிப்பினையும், உண்மை முகங்களும்!

NOV 19/2015: தமிழகத்தில் கனமழை, வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. 
தமிழகம் முழுவதும் எத்தனையோ ஏரி,கண்மாய், குளங்கள் ஆக்கிரமிக்க ப்பட்டு மக்களின் சுயநல கட்டிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் மழைநீர் ஒதுங்க இடம் இல்லாவிட்டால்  மழை நீர்  வேறு எங்கு போகும்? வேறு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. மழைநீர்  ஓய்வெடுக்கும் நீர் நிலப்பகுதிகளை கபளீகரம் செய்து விட்ட மனிதர்களின் மீதான கோபத்தில் தமிழகமெங்கும்  நூற்றுகணக்கான மக்களை கொன்று விட்டது மழை.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம், மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அரசு இயந்திரம் ஆமை வேகத்திலேயே செயல்பட்டது ஒரே மழை, ஓயாத மழையால் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தால் மூழ்கின. சென்னையில் மக்களை வீடுகளில் இருந்து வெளியே கொண்டு வர படகுகள் பயன்படுத்தப்பட்டன.

மழையால் ஏற்ப்பட்ட பாதிப்புக்கு தமிழக அரசின் நிவாரணம் ஆமை வேகத்தில் செயல்பட தொடங்கும் முன்னரே பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகளை வழங்குதல், அவர்களை தண்ணீரில் மூழ்கி கிடந்த வீடுகளில் இருந்து பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தது போன்ற நல்ல பணிகளை வெகுவேகமாக செய்தார்கள். அவர்களின் சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. 

*முதலில் களம் இறங்கி சிறப்பான சேவை செய்த கட்சிகள், இயக்கங்கள்*

SDPI கட்சி : மீட்பு பணி, மற்றும் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியது முதல் பல்வேறு பணிகளை மிகசிறப்பாக செய்தார்கள்.  பாதிக்கப்பட்ட மக்களின் துயரில் பங்கேற்கும் விதமாக வருகின்ற 20/11/2015 தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் 1 நாள் நிவாரண நிதி திரட்டி பாதிக்க பட்ட மக்களுக்கு உதவ முடிவு செய்திருப்பது வரவேற்க தக்கது. அதுபோல் மதுவுக்கு எதிராக தொடர் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் SDPI கட்சி நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நம்தமிழர் கட்சி:  தோழர் சீமான் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் தமிழ் மீது, தமிழர்கள் மீது கொண்டுள்ள அன்பு என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களது மீட்பு மற்றும் உணவு வழங்குதல் போன்ற பணிகள் சிறப்பாக நடந்தன. தமிழ் நாட்டு வளங்களை கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக நம்தமிழர் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது இவர்களின் தனி சிறப்பு எனலாம். 

ம.க இ.க : மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளும் அதன் தோழர்களும் பல்வேறு மக்கள் நல பிரச்சனைகளை பேசியும் செய்தும் வருபவர்கள். இந்த உண்மை கம்னிஸ்ட் கட்சி தோழர்கள் கடலூர் மற்றும் சென்னை பகுதியில் மீட்ப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்நிலையில் தோழர் கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது என்பது ஜெயலிதாவின் அராஜகத்துக்கு, அடக்குமுறைக்கு கிடைத்த தோல்விஎனலாம்.
பாப்புலர் பிரான்ட் ஒப் இந்தியா: மீட்பு பணி, மற்றும் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அரிசி, டவல், போர்வை, போன்ற அத்தியாவாசிய பொருட்களை வழங்கி மிகசிறப்பாக செயல்பட்டார்கள். இந்தியாவை கபளீகரம் செய்யத்துடிக்கும் ஹிந்துத்துவா சக்திகளுக்கு எதிராக சிறுபான்மை மக்களோடு தலித் மற்றும் பெரும்பான்மை இந்து சமூகத்தோடு இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி மதவெறிக்கு எதிரான மக்கள் அமைப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் சுனாமி மீட்பு பணிகளில் திறம்பட செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித நேய மக்கள் கட்சி: த.மு.மு.க மற்றும் ம.ம.க இவற்றின் தொண்டர்கள் மீட்ப்பு பணியில் அசுர வேகத்தில் செயல்பட்டு தங்களின் சேவை யாருக்கும் சளைத்ததல்ல என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்கள். இவர்களும் சுனாமி மீட்பு பணிகளில் திறம்பட செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் பணிகளை சிறப்பாக செய்தார்கள். 

INTJ:  இந்திய தவ்கீத் ஜமாஆத் சார்பாக அதன் தலைவர் எஸ்.எம். பாக்கர் மற்றும் தொண்டர்கள் உணவு பொட்டலங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவி புரிந்தார்கள். 

நடிகர்கள்: நிவராண பணிகளுக்கு உதவிய தமிழ் நடிகர்கள் சந்தானம், சிம்பு, லாரன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

மற்ற அரசியல் கட்சிகள்: மற்ற கட்சிகள் தங்களால் இயன்ற  உதவிகளை செய்திருகிறார்கள். தே.மு தி.க,, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், ப.ம,க. போன்றோர். 

*மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஆபத்தானவர்கள்*
அ.தி.மு,க: வெள்ள நிவாரண பணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.500 கோடி ஒதுக்கி உள்ளார். அரபு மன்னர்களின் அரண்மனைகளுக்கு ஒத்த சொகுசு பங்களாவில் ஓய்வு எடுத்து மக்களை மறந்த அம்மாவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் என்று நம்புவோம்.

திமுக:  திமுக 1 கோடி வழங்கி சில மீட்ப்பு வேலைகளையும் செய்தது இருந்தாலும் தமிழகத்தை ஆண்டு கொள்ளையடித்தவர்கள் குடும்பம் இது போன்ற நேரத்திலாவது தங்களது முழு சக்தியையும், பண பலத்தையும் காண்பிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது அதையும் நழுவ விட்டு விட்டார்கள். 

தெனிந்திய நடிகர் சங்கம்: என்கிற தமிழ்நாடு நடிகர் சங்கம் வெளிப்படையாக தாங்கள் யார் என்பதை காட்டி கொண்டார்கள். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை அரசு கவனித்து கொள்ளும் நடிகர் சங்கம் என்பது நடிகர்கள் பிரச்னையை மற்றும் பேசும் அமைப்புதான் என்று சொல்லி தங்கள் படங்களை ரசித்து தங்களுக்கு பிச்சை போடும் தமிழ் மக்களை, ரசிகர்களை கேவலப்படுத்தி உள்ளது. இவர்கள் வாயை பொத்தி கொண்டாவது இருந்திருக்கலாம். இப்படி நார வாயை திறந்து தாங்கள் சாக்கடையை விட கேவலமானவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள். ஓடி ஓடி கட் அவுட்டுக்கு பால் ஊத்தின ரசிகர்கள் சிந்திக்க வேண்டும்அவர்களுக்கும் நன்றி.
ரஜினி காந்த்: ரஜினி காந்தின் தற்போதைய சொத்து மதிப்பு 10 ஆயிரம் கோடி,சாதாரண பஸ் கண்டேக்டர் இவரை பெரும் கோடீஸ்வரன் ஆக்கிய தமிழ் மக்களுக்கு இவர் செய்த சேவை என்ன. ஆந்திரா புயலால் பாதிக்கப்பட்ட பொழுது இவர் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. முட்டாள் தமிழ் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ரஜினியை பற்றி தெரிந்து கொள்ள http://www.sinthikkavum.net/2011/05/blog-post_7731.html இந்த லிங்கை கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள்: ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா டவுசர் பாண்டிகள் நாங்கள்தான் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள் நாங்கள் இல்லை என்றால் இந்த தேசம் அழிந்து விடும் என்று பீலா விடுபவர்கள் வழக்கம் போல் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. ராஜாவையும், ராம கோபால ஐய்யரையும், அர்ஜூன் சம்பத்தையும் எங்கே என்றே தெரியவில்லை. 

பாரதிய ஜனதா (BJP) : ஆர்.எஸ்.எஸ். மதவாத இயக்கத்தின் அரசியல் முகமூடியான பாரதிய ஜனதாவும் மத்தியில் ஆளும் மோடியின் தமிழக வாரிசுகள்  இலா. கணேசன், தமிழ் இசை சவுந்தரராஜன், எச்ச ராஜா இவர்கள் எல்லாம் கனமழை காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டார்கள்.  சர்ச்சையை கிளப்ப, பிரச்சனைகள் பண்ண, கலவரம் நடத்த முடியுமா என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள். 

சிந்திக்கவும்; மக்கள் பேரிடர்கள் நிகழும்போது அது நமக்கு நல்லவர்களை அடையாளம் காட்டும், யார் சேவை மனப்பான்மையோடு செயல்படுகிறார்கள் என்பதை உணர்த்தும். தமிழக மக்கள் இதன் மூலம்  படம் படித்து கொள்ள வேண்டும். ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வேண்டும், ஏரிகளில் மூடி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை ஒடுக்க போராட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குளங்களை, ஏரிகளை தூர்வார தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும். 


மக்கள் தூங்கி கிடந்தால் அரசியல் கொள்ளையர்கள், கார்பரேட் கொள்ளையர்கள் இந்த நாட்டை சுடுகாடக்கிவிடுவார்கள். அவர்களுக்கு இங்கே விவசாயம் செய்து பிழைக்க தேவை இல்லை, உயிரை பயணம் வைத்து மீன் பிடித்து பிழைக்க தேவை இல்லை. சிறுதொழில்கள் செய்து வாயிற்று பிழைப்பு நடத்த தேவை இல்லை. அவர்கள் பணம் எல்லாம் சுவிஸ் பேங்க்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உங்களை நல்ல சுரண்டி விட்டு உங்களிடம் ஒன்றும் இல்லை என்றால் வெளிநாடுகளில் போய் செட்டில் ஆகி விடுவார்கள். நீங்கள்தான் இங்கே வாழப்போகிறவர்கள் என்பதை மனதில் கொண்டு செயல்படுவது காலத்தின் காட்டாயம்.           
*யாழினி*

2 comments:

Anonymous said...

மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு : ஓடி ஒளிந்த பாஜக, இந்து முன்னணி, RSS...!!

மழை வெள்ளத்தால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

பொதுமக்களின் துயர் துடைக்க அரசாங்கம் நுழையாத பகுதிகளில் கூட தமிழக முஸ்லிம் இளைஞர் படை நுழைந்து பாதிக்கப்பட்ட மக்களை வெள்ள நிவாரணத்திலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, மமக, PFI, SDPI உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஜாதி மதம் பாராமல் அனைத்து சமூக மக்களுக்கும் மனிதநேயத்தை வாஞ்சையோடு பறைசாற்றினர்.

முஸ்லிம்களின் மனிதநேயத்தை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தாலும் உதவி பெற்ற மக்கள் ஒருபோதும் நன்றி மறக்க மாட்டார்கள்.

கடந்த வருடம் ஜார்கண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் மக்களை 4 இன்னோவா காரில் காப்பாற்றியதாக பாஜக கூறியது.

அன்று முதல் இன்றுவரை 4 இன்னோவா காரில் 15 ஆயிரம் பேரை எப்படி காப்பாற்ற முடியும் என்று அன்று முதல் இன்று வரை நாமும் கேள்வி எழுப்பி வருகிறோம் இதுவரை பாஜகவினர் யாரும் பதில் சொல்லவில்லை,

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம்கள் மிக துரிதமாக செயல்பட்டு அளவில்லா உதவிகளை செய்த வேளையில்....

இந்துக்களுக்காக வாதாட, இந்துக்களுக்காக போராட, இந்துக்களுக்காக பரிந்து பேச இந்து முன்னணி என்று படம் காட்டும் இராம.கோபாலனோ அல்லது அவரது இயக்கத்தினரோ யாராவது ஒருவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்களா ?

தமிழகத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து விட்டோம் என்று படம் காட்டும் தமிழிசை சௌந்தர் ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் யாராவது வீதிக்கு வந்தார்களா ?

இந்து, இந்து என்று இந்து பெயரில் பிச்சை எடுத்து வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தோ அல்லது அவரது கட்சியினர் யாராவது களத்திற்கு வந்தார்களா ?

பாஜக, இந்து முன்னணி, RSS, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட எந்த இந்துத்துவ இயக்கங்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் செய்யவில்லை, ஆறுதல் கூட சொல்ல முன்வரவில்லை,

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம்கள் பள்ளிவாசலில் அடைக்கலம் கொடுத்தது போல் சங்கர மடத்தில் முஸ்லிம்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம், எந்த இந்துவுக்காவது அடைக்கலம் கொடுத்தார்களா ? காஞ்சி சங்கராசாரியாரோ அல்லது சங்கரமட மடாதிபதிகளோ வீதிக்கு வந்தார்களா ?

4 இன்னோவா காரில் 15 ஆயிரம் பேரை காப்பாற்றினோம் என்று படம் காட்ட சொன்னால் நன்றாக காட்டுவார்கள் அல்லது மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும், வன்முறையை கட்டவீழ்த்து விட வேண்டும், முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என்றால் சூலாயுதத்துடன் முன் வரிசையில்ஃ வருவார்கள்.

மனிதநேயம் என்றால் இந்துத்துவம் பேசக்கூடிய ஒருவரும் களத்திற்கு வருவதில்லை,

மனிதநேயத்தை பற்றி பேசுவதற்கு இந்துத்துவவாதிகளுக்கு துளியும் தகுதியில்லை,

மனிதநேயத்தின் மறுப்பெயர் முஸ்லிம்கள் என்று எப்போதும் போல் இம்முறையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ். துரோகங்களை அம்பலப்படுத்தும் இந்துமகா சபை!!
காந்தி படுகொலையைத் தொடர்ந்து தாய் அமைப்பான தங்களை காட்டிக் கொடுத்து நேருவுடன் கை கோர்த்துக் கொண்ட பச்சை துரோக இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்று இந்து மகாசபை சாடியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நாட்டை மட்டுமல்ல இந்துக்களையும் காட்டிக் கொடுத்த துரோகிகள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தாய் அமைப்பே இந்து மகாசபை என்பதை சிலராவது அறிந்திருப்பார்கள். ஆனால் 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், இந்து மகாசபையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டனர். அவர்கள் நேருவுடன் கை கோர்த்துக் கொண்டு காந்தி கொலை விவகாரத்தில் இருந்து விலகி நின்றனர். காந்தி கொலை சம்பவத்தின் போது இந்து மகாசபையினர் சித்ரவதைகளுக்கு ஆளானார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் இந்து மகாசபையை விட்டு ஓடிய துரோகிகள். இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாரதிய ஜனதாவை முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உண்மை முகத்தை, இந்துக்களின் உணர்ச்சிகளை எப்படியெல்லாம் தூண்டிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது என்பதை அம்பலப்படுத்துகிற காலம் வெகுதொலைவில் இல்லை.