திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் சாதி மத சண்டைகள் இல்லாமல் அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் காலூன்ற முடியவில்லை .
ஆண்டாண்டு காலமாக சாதிய அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிவந்த கூரியூர் முகமது அலி ஜின்னா சாகிப் ,அப்துல்லாஹ் அடிகளார் ,மதுரை ஆசாத் பாய் ,ஜனாப் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் போன்ற தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் , பார்ப்பனியம் கட்டமைத்துள்ள சாதியத்தில் இருந்து தாங்கள் வெளியேறி சமதர்மத்தை போதிக்கும் இஸ்லாத்தில் இணைந்தால் மட்டுமே தமது மக்களுக்கு சாதிக்கொடுமையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று அதில் இணைந்தனர்.
இந்த தலித் இயக்க தலைவர்கள் இஸ்லாத்தில் இணைந்ததோடு , டாக்டர் சேப்பன் போன்றவர்களின் உதவியுடன் மீனாட்சிபுரம் போன்று கிராம கிராமமாக மக்களை இஸ்லாத்திபால் அழைத்துவந்தனர். இவர்கள் அப்பொழுது நடந்த எம்ஜியார் அரசால் தொடர்ந்து மிரட்டப்பட்டும் அஞ்சவில்லை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான குழு ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறிய போதும் அவர்கள் அதை நிராகரித்து விட்டனர் . [ பின்னாளில் கூரியூர் முகமது அலி ஜின்னா சாகிப் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் வெட்டி கொல்லப்பட்டார்.
ஆண்டாண்டுகாலமாக தங்களால் அடிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அலையலையாக இஸ்லாத்தில் இணைவதின் மூலம் மனுதர்மத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் சவக்குழி தோண்டப்படுவதை அறிந்த RSS இதை தடுப்பதற்காக 1980 பிப்ரவரில் கரூரில் மாநில அளவிலான கூட்டத்தை கூட்டி ஆலோசித்தனர் .வடநாட்டில் நடப்பது போன்று ,இந்துக்களுக்கு எதிராக ஒரு பொது எதிரியை சித்தரித்து ,அவர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து கலவரங்கள் நடத்தி மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தால் மட்டுமே பார்பனீயத்தின் ஆளுமையை தக்கவைக்க முடியும் என்று முடிவு செய்தனர்.
அந்த முடிவின்படி ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களான யாதவராவ் ஜோஷி, சேஷாத்ரி ,சூர்யநாராயணராவ் ஆகியோரின் ஆலோசனைப்படி ராமகோபாலன் அய்யர் துக்ளக் சோ ராமசாமி ஆகியோரால் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற தொழிலதிபர்களின் ஆதரவோடு இந்து முன்னணியை ஆரம்பித்தனர் .காங்கிரசில் இருந்து கொண்டு கிறிஸ்தவ நாடாரான நேசமணியுடன் போட்டியிட முடியாத தாணுலிங்க நாடார் இந்துமுன்னனியின் முதல் மாநில தலைவரானார் .
தமிழக மண்ணில் ஒரு விசவித்து விதைக்கப்படுவதை அனைத்து கட்சிகளும் எதித்தபோது '' முஸ்லிம்களுக்கு ஒரு முஸ்லிம் லீக் இருக்கும் போது ,இந்துக்களுக்கு ஒரு இந்துமுன்னணி இருந்தால் என்ன தவறு ? '' என எம்ஜியார் கூறி இவர்களுக்கு முழுஆதரவு கொடுத்தார். இவர்களின் முதல் இலக்காக கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கும் கன்னியாகுமரியை தேர்ந்தெடுத்தனர் .கன்னியா குமரி மாவட்டத்தை ''கன்னிமேரி '' மாவட்டமாக மாற்ற கிறிஸ்தவர்கள் முயற்சி செய்வதாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்தனர். ஊர்முழுதும் போஸ்டர் அடித்து ஒட்டிகிறிஸ்தவர்களின் மனதில் பயத்தையும் பதட்டத்தையும் கொண்டுவந்தனர்.
1982 இல் நாகர்கோவிலில் இந்து எழுச்சி மாநாடு நடத்தியதோடு அடுத்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது கிறிஸ்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு பலரை கொன்றனர் . 9 கிறித்தவர்கள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர் .[ அன்று விதைத்த விஷவித்து இன்று அங்கு எம்பி தேர்தலில் வெல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது .]
இவர்களின் அடுத்து இலக்காக கோயம்புத்தூர் அமைந்தது: இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகமான யூனிட்கள் செயல்படும் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிரவாத பயிற்ச்சிகள் நடக்கும் ஒரு மாநிலமாக கேரளா இருந்து வந்தது. அதனால் பாலக்காடு போன்ற கேரளா எல்லைகளை தன்னகத்தே கொண்ட கோவையை தங்களது அடுத்த இலக்காக ஆர்.எஸ்.எஸ். தேர்வு செய்தது. இந்துமுன்னணியும் பாஜகவும் வரும்வரை கோவை அமைதியாகத்தான் இருந்தது .70களின் இறுதியில் கோவையில் காலூன்றிய மார்வாடிகள் மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பெருமுதலாளிகளின் ஆதரவோடு இந்த சாத்தான்கள் கோவையில் வேரூன்றினர் .
1982 ஜூன் 20 அன்று ,முதல்முறையாக கோவை வ.உ.சிதம்பரம் பூங்கா மைதானத்தில் நடந்த இந்துமுன்னணி பொதுக்கூட்டத்தில் ,இஸ்லாம் கிறிஸ்தவம் குறித்தும் கன்னிமேரி குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் முஸ்லிம் பெண்களை பற்றியும் ,ஆபாசமாக அறுவருக்கத்தக்கவகையில் பாஜக தலைவரான திருக்கோவிலூர் சுந்தரம், ராமகோபாலன் போன்றவர்கள் பேசினார்கள். இவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்கள் உயிருக்கு மேலானதாக கருதும் பெருமானார் குறித்து பொதுக்கூட்டத்தில் ஆபாசமாக பேசியது கோவை முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மறுபடி 1983 ஜூலை 5 அன்று ,கோவை தேர்நிலைத் திடலில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் திருக்கோவிலூர் சுந்தரம் முஸ்லிம் பெண்களையும் கன்னிமேரியையும் நபிகள் நாயகத்தையும் மிக ஆபாசமாக பேசினார்.
தமிழகத்தில் நிலவும் நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் திட்டமிட்டு விஷப்பிரச்சாரம் செய்துவரும் ராமகோபாலனை கைது செய்யவேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்தும் கூட , எம்ஜியார் அரசின் ஆதரவோடு தங்குதடையின்றி தன் விஷப் பிரச்சாரத்தை தொடர்ந்து வந்தார் ராமகோபாலன். இந்நிலையில்1984 ஜூலை 18 இல் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நபிகள் நாயகத்தையும் முஸ்லிம் பெண்களையும் இழிவாக பேசிவிட்டு ரயிலில் மதுரை சென்றபோது மதுரை ரயில்நிலையத்தில் வைத்து கோவை பாஷா பாய் அவர்களால் தாக்கப்பட்டான் ,இதில் உடனிருந்த ஹைதர் அலியும் கைது செய்யப்பட்டார் .இதனால் தலையில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தை மறைக்கவே ராமகோபாலன் காவிக்குல்லா அணிகிறார்.
குறிப்பு: இன்றுவரை பிள்ளையார் சதுர்த்தி என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் கலவரத்தை உண்டாக்கி மத நல்லிணக்கத்தை கெடுத்து வருகிறார் ராமகோபால ஐயர். இந்த பாசிஸ ஹிந்து தீவிரவாதத்தின் தமிழக வருகையின் எதிர் வினையே அல் உம்மா போன்ற இயக்கங்களின் வருகை ஆகும்.
No comments:
Post a Comment