Dec 31, 2013

ரத்த வாசம் மட்டுமே வீசுகிறது!?

அழியவிருக்கும் இந்தியா :  கேட்டாலே,
ரத்த வாசம் மட்டுமே
வீசுகிறது.


மனம் மட்டும் விதைத்து 
விளைந்த திருநாட்டில் 
மறைந்து வாழ்ந்த காவி 
கலகம் எடுக்க
குஜராத் வந்தது

சங்கம் என்ற போர்வையில்
சாதிகளை பரப்பி
சமயம் என்ற வீதியில் ஒன்று திரட்டி
சமத்துவம் என்ற குழந்தையின்
சங்கை அறுத்து சாலையில்
எறிந்த சனியன் சங்கபரிவாரம்

கோத்ரா என்ற பொய் குரலை
உயர்த்தி கோஷமிடும் கொடிய
மிருகங்களை வைத்து
கொஞ்சி திரியும் குழந்தைகூட
இல்லாமல் கொடிய வேட்டை
அரங்கேறி அரக்கர்களால்
இன அழிப்பு தொடங்கியது

தொடங்கிய நாள் முதல்
தொலைந்தது மதம்
அங்கு இருந்தவர்களிடம்
கண்டதெல்லாம் அரக்கனின் குணம்
அண்ணன் என்று கூறியவன்
அறுக்கிறான் அண்ணியின் கழுத்தை
அண்ணனின் முன்னாள்
தம்பி என்று கூறியவன்
சிதைக்கிறான் தங்கையின் கர்ப்பை
தம்பியின் முன்னாள்
மகளை கொள்கிறான்
கேட்டால் அவள் வேறு மதம்
என்கிறான்

குஜராத் என்று கேட்டாலே
ரத்த வாசம் மட்டுமே
வீசுகிறது
அங்கோ கர்ப்பை இழந்த
கண்ணிகள் எத்தனை
கழுத்தை இழந்த
கணவன்கள் எத்தனை
குழிக்குள் வைத்த
குழந்தைகள் எத்தனை
எண்ணிக்கையில் அடங்கா
அராஜகம்தான் அரசாட்சியின்
அங்கமாம் குஜராத்தில்

அழிப்பை மட்டுமே
தனது ஆயுதமாய் வைத்து
அரசவை ஏறத்துடிக்கும் கேடியின்
ஆலோசனைக்கு ஏற்ப
அரங்கேறிய அழிப்பிற்கு எதிராக
அணிதிரள அடிமைகளுக்கு
வக்கில்லை ஆனால் இது
வெறும் கரும்புள்ளிதானே
என்று அலட்சியமாய்
கூறும் கேவலமடைந்த
நாடோ இந்தியா

இன அழிப்பை இன்பமாய்
காண விரும்பிவிட்டது
இனி இருட்டில்தான்
வாழும் இந்திய இறையாண்மை

காவிகளை பாவிகள்
என்று ஏற்க்க மறுக்கும் நாடோ
காவு கொடுக்க
காவிகளை வைத்து அடித்தளம்
போடுகிறது அதை
அரசியல் என்ற போர்வையில்
ஆதரவு கேட்கிறது
விரைவில் அழியும் இந்தியா 

3 comments:

Seeni said...

Kodumai thaan

WARRIOR said...

எழுதியவர் பெயருடன் கொடுத்தால் நல்லம்

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்