Nov 11, 2012

ஊழலுக்கு எதிரான கார்பரேட் சாமியார்!


Nov 12: வரி ஏய்ப்பு தொடர்பாக 5 கோடி ரூபாய் அபராதம் கட்ட யோகா குரு பாபா ராம்தேவ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா ட்ரஸ்ட் ஆகியவை சார்பாக ஹரித்துவாரில் சிவ்ரிஸ் யோகா  முகாம்கள் நடத்தப்பட்டது.

அதில் கலந்து கொண்டவர்களிடம் வியாபார நோக்கில் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 5.14 கோடி ரூபாய் சேவை வரி கட்டுவதிலிருந்து இந்நிறுவனம் நழுவியுள்ளது

சிந்திக்கவும்: டெல்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி ரூபாய் பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்தவர். உண்ணாவிரதம் இருக்கவே பதினெட்டு கோடி செலவிட்டவர்.
 
அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலமும், ஓய்வாக தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும், வான்வழி பயணத்திற்கு சொந்த விமானமும், தரைவழி பயணத்திற்கு விலை உயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர்.

இந்தியாவில் கருப்புப் பணம் வெள்ளையாக மாறவும், ஹவாலா பணத்தின் சுழற்சியிலும் முக்கிய பங்கு வகிப்பதே இது போன்ற கார்பொரேட் சாமியார்களுடைய மடங்களும் அவர்கள் நடத்தும் டிரஸ்டுகளும் தான்.

1 comment:

SNR.தேவதாஸ் said...

எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்