புதுடில்லி: கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும்
பாபா ராம்தேவ், நான்கு கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக,
பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு பாபா ராம்தேவ், இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மத்திய கலால் வரித்துறை பாபா ராம்தேவ், வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில் பாபா ராம்தேவ் தனது திவ்ய யோகா மந்திர் என்ற அறக்கட்டளை மூலம் 2007லிருந்து 2011 வரை, உறுப்பினர் சேர்க்கை மூலம், 37.98 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ஆனால், இதற்கான சேவை வரியான, நான்கு கோடி ரூபாயை, ராம்தேவ் செலுத்தவில்லை. இது தொடர்பாக, கான்பூரைச் சேர்ந்த கலால் வரித்துறை அதிகாரிகள், பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா மந்திர் ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அந்த அறக்கட்டளைகளுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு பாபா ராம்தேவ், இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மத்திய கலால் வரித்துறை பாபா ராம்தேவ், வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில் பாபா ராம்தேவ் தனது திவ்ய யோகா மந்திர் என்ற அறக்கட்டளை மூலம் 2007லிருந்து 2011 வரை, உறுப்பினர் சேர்க்கை மூலம், 37.98 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ஆனால், இதற்கான சேவை வரியான, நான்கு கோடி ரூபாயை, ராம்தேவ் செலுத்தவில்லை. இது தொடர்பாக, கான்பூரைச் சேர்ந்த கலால் வரித்துறை அதிகாரிகள், பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா மந்திர் ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அந்த அறக்கட்டளைகளுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment