Jul 18, 2011

இப்படியும் ஒரு காதல்!

JULY 19, வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் எழில்மாறன். ஸ்ரீபெரும் புதூரில் தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக உள்ளார். இவரது நண்பர் ஒருவர் வேலைக்காக ஒரு செல்போன் எண்ணை கொடுத்திருந்தார்.

இந்த எண் மூலம் கடந்த மாதம் தொடர்பு கொண்டபோது அது ராங்காலானது. எதிர்முனையில் பேசிய சிவகங்கை மாவட்டம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி தனலட்சுமிக்கு போய்வுள்ளது. வேணும்ன்னே போனை போட்டு கலாய்க்கறயா என சத்தம் போட அய்யய்யோ உண்மையிலயே ராங்நம்பர் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். .

இதன்மூலம் அவர்களுக்கு இடையே செல்போன் நட்பு தொடர்ந்தது. தினம் தினம் பேசும் அளவுக்கு போய்வுள்ளது இவர்களது நட்பு. கடந்த வியாழக்கிழமை திடீரென போன் செய்த தனலட்சுமி, என் வீட்ல ரொம்ப டார்ச்சர் செய்றாங்க அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். ஸ்ரீபெரும்புதூரில் ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்தால் எனது முடிவை மாற்றிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அவருக்கு எழில்மாறன் ஆறுதல் கூறி நீ திருச்சி வா நான் வந்து உன்னை அழைச்சிம் போய் வேலை வாங்கி தர்றன் என்றுள்ளார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி வந்த தனலட்சுமியை, எழில்மாறன் முதன்முதல் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்குள் காதல் அரும்பியது. எழில்மாறன், தனலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு தனலட்சுமி ஒப்புக் கொள்ளவே, இருவரும் வேலூர் வந்தனர்.

எழில்மாறன் வீட்டில், பெண்ணின் வீட்டில் சம்மதம் கேட்க தொடர்பு கொண்டபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பயந்த எழில்மாறன் பெற்றோர் அவரிடம், ‘பெண்ணை எங்கிருந்து அழைத்து வந்தாயோ அங்கேயே விட்டுவிடு’ என்று கூறியுள்ளனர். ஆனால், தனலட்சுமியை இன்று காலை சேண்பாக்கம் விநாயகர் கோயிலில் எழில்மாறன் திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு கேட்டு வேலூர் மகளிர் காவல்நிலையத்தில் காதல் மனைவி தனலட்சுமியுடன் தஞ்சம் அடைந்தார். அங்கு மகளிர் போலீசார், எழில்மாறன் பெற்றோரை அழைத்து பேசியதை தொடர்ந்து எழில்மாறன் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்

சிந்திக்கவும்: காதலுக்கு கண்ணில்லே என்று சொன்னார்கள் ஆனால் அறிவும் இல்லை என்பது இது போல் சம்பவங்கள் மெய்பிக்கின்றன. இது போல்தான் ஒருவர் போனில் ஒரு பெண்ணை காதலித்து பின்னால் அந்த பெண்ணை நேரில் பார்க்கும் போது அவர் இவரை விட வயதில் மூத்தவர் அழகும் இல்லை என்பதை தெரிந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண் பார்க்க அழகாக மனதுக்கு பிடித்தவராக இருந்ததால் கல்யாணத்தில் போயி முடிந்தது இல்லை என்றால் என்ன நடந்திருக்குமோ? செல்போன் என்ற ஒரு அறிய கண்டுபிடிப்பு இப்படி தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதே வருத்தபடும் செய்தி.

1 comment:

Raju said...

Ippathan Iphone vanthuduchey, appo I phone vilai kuranchathuna ellarum I phone use pannuvanka appo ithu mathiriyana pirachanaiku theervu kidaikum thane.