Jul 18, 2011

சுவாமி நித்தி படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்!

JULY 19, சென்னை:  2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான சாமியார் நித்யானந்தா  நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின.

இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சுவாமி நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச் சாட்டை கூறினார். இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம்.

வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் சுவாமி நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்,  எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன்.நான் எந்தக் கட்சியையும் சாராதவன்.

சுவாமி நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட்.  நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும் போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்.  தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லைபடு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும்.

அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க.  அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார்.

3 comments:

Anonymous said...

நீங்கள் எங்கள் இந்து மதத்தை கேவலப்படுத்தவெல்லாம் முடியாது. ஏனெனில் எங்கள் மதத்தில் எதுவும் நடந்த சம்பவங்களோ, நடந்ததாக ஆதாரமோ நிச்சயமாக கொண்டு வரமுடியாது.
எல்லாமே கற்பனையாய் மனித குளம் அமைதியோடு வாழ வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் எழுதி
விட்டு சென்ற மனித வாழ்வை மேம்படுத்த எழுதப்பட்ட கதாபாத்திரங்கள்தான் ராமாயணம், மகாபாரதம்,
திருவிளையாடல், தசாவதாரம் போன்றவை எல்லாம். அவற்றில் வரும் நல்ல பல கருத்துக்களை எடுத்துக்கொண்டு
மீதியை விட்டுவிடுங்களேன். ஏன் எங்களில் அறியாத மாந்தர் செய்யும் காரியங்கள் போல் நீங்களும்
பதிலுக்கு செய்கிறீர்கள். *** தமயந்தி ***

SURYAJEEVA said...

வோல்கா முதல் கங்கை வரை என்று அனைத்து மதங்களும் மாறி உண்மை கண்ட ராகுல்ஜியின் புத்தகத்தை படித்து பார்த்து விட்டு பதில் சொல்லுங்களேன் தமயந்தி.

ThiruppathiRaja said...

enkal hindu matham enkalai nallavarkalaka than vaithirukum enkal mathathai kurai sollum thakuthi yentha matha thavarukum eillai