Jun 3, 2011

சீமான் மீது பொய் புகார், அவதூறு பரப்பும் தமிழின விரோதிகள்!!

JUNE 4, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீது களங்கப்படுத்தும் உள்நோக்கத்தோடு திட்டமிட்ட செயல்கள் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வருகின்றன.

பொய்ப்புகார் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு வழக்கினை பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

கடந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து அவர்களை தோற்கடிக்க முக்கிய காரணியாக அமைந்தார்.

மேலும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், முறைகேடு ஆகியவற்றில் மூழ்கிய சில காட்சிகள், அதன் ஊடகங்கள் நான் தலைமறைவு, என்கிற பொய்யான செய்தியை திட்டமிட்டு பரப்பி வருகின்றன.

நான் எங்கும் தலைமறைவாகவில்லை, அத்தோடு எவ்வித விசாரணைக்கும் தயாராகவே உள்ளேன் என்று சீமான் தெரிவித்தார்.

எமது அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம்.

இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எமது போராட்டத்தைஎள்ளவும் தளரவைக்கமுடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்று சீமான் தெரிவித்தார்.

No comments: