Jun 20, 2011

தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை!

JUNE 21,  சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்தியா VS பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

கடந்த நான்கரை ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பின், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சுவாமி அசீமானந்த், சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கலசங்கரா ஆகியோருக்கு எதிராக இன்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

CBI  மற்றும் NIA போன்ற புலனாய்வு அமைப்புகள் கடந்த நான்கரை ஆண்டு காலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தன அதன் அடிப்படையில் இன்று பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் அபிநவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக உள்ள அசீமானந்த் ஹைதராபாதில் மக்கா மசூதி குண்டுவெடிப்பு தொடர்பாக 2010 நவம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2 comments:

Anonymous said...

who is this? male or female or gay?

God has taken her personality and put down her image.

Let this fanatics go to hell.

ashok said...

so proud of them