Mar 30, 2011

கலைஞர் டி.விக்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை!!

மார்ச் 30, சென்னை: கலைஞர் டி.வியுடன் தனக்கு எவ்வித தொடர்புமில்லை என தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேனலுக்கு ‘கலைஞர் டி.வி’ என பெயர் சூட்டிய பிறகே எனக்கு இவ்விஷயம் தெரியவந்ததாக(?) கருணாநிதி தெரிவித்துள்ளார்.

“எனது மனைவிக்கும், மகளுக்கும் கலைஞர் டி.வியில் பங்குகள் உண்டு என்பது உண்மைதான். துவக்கத்தில் யாரிடமிருந்தோ வாங்கிய கடன் பெயரிலேயே பிரச்சனை உருவானது.அந்த கடன் வட்டியுடன் திருப்பி அடைக்கப்பட்டுவிட்டது.

எனக்கு அந்த சேனலுக்கு எவ்வித தொடர்புமில்லை.” என கலைஞர் மு.கருணாநிதி கூறியுள்ளார். அதேவேளையில், கலைஞர் டி.வியின் சி.இ.ஒ சரத்குமார் ரெட்டியை எந்த நேரத்திலும் சி.பி.ஐ கைது செய்யலாம் என கடைசியில் கிடைத்த தகவல் கூறுகிறது.

No comments: