Feb 23, 2011

பாகிஸ்தான் அபார பந்து வீச்சு!!

அம்பந்தோட்டம், பிப்.23: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் கென்யாவுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 206 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பாகிஸ்தான் பதிவுசெய்தது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானுக்கும் கென்யாவுக்கும் இன்று இலங்கையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது பாகிஸ்தான். அந்த அணியில் கம்ரான் அக்மல் 55, யூனுஸ் கான் 50, மிஸ்பா உல் ஹக் 65, உமர் அக்மல் 71 என ரன்கள் விளாசினர். 50 ஓவர்களின் இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய கென்ய அணியின் துவக்கம் ஓரளவு நன்றாக அமைந்தபோதும், பின்வரிசை ஆட்டக்காரர்கள் மெதுவாக ஆடினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் விழுந்தன. அந்த அணியின் ஒபுயா அதிக பட்சமாக 47 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சாகித் அப்ரிதி 5 விக்கெட்களை சாய்த்தார். கென்ய அணி 34 வது ஓவரில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

No comments: