
சென்னையில் நடைபெறும் 4 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது. காலை 9.30 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் டிக்கெட்டுகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்டரில் விற்கப்படும்.
3-ந்தேதியில் இருந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் டிக்கெட்டுகள் கிடைக்கும். ஒருபோட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.500 (ஏ.பி.சி. ஸ்டாண்டு லோயா) ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.20 ஆயிரம் (டி.எப்.ஸ்டாண்டு, குளிர்சாதனம் மற்றும் உணவு வசதிகளுடன் கூடிய பாக்ஸ்) ஆகும்.
இதேபோல ரூ.1000, ரூ.2000, ரூ.2500, ரூ.3500, ரூ.4000, ரூ.5000, ரூ.10000 விலையிலும் டிக்கெட்டுகள் உள்ளன. நியூசிலாந்து- கென்யா போட்டிக்கு மட்டும் டிக்கெட் விலை குறைவானது. இந்தப்போட்டிக்கான குறைபட்ச டிக்கெட் விலை ரூ.250 ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.10 ஆயிரம். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டிகளுக்கு மேல் கொடுக்கப்படமாட்டாது.
No comments:
Post a Comment