
இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்தும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற மக்கள் வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.இவர்களில் 6 லட்சம் பேர் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரிடம் வருகின்றனர்.
மார்பக புற்று நோய்க்கு ஆஸ்திரேலியாவில் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அதன் விலை ரூ.3000-ம் தான். ஆனால் இந்த மருந்தை வாங்கி பயன்படுத்த மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் பயன் பாட்டிற்கு வரும். மேலும் உணவகங்கள் மற்றும் நடமாடும் கடைகளில் பல முறை பயன்படுத்தக் கூடிய எண்ணெய்களை உபயோகிக்கின்றனர். இதன் மூலம் புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடற் பயிற்சி செய்யும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என கூறினார்.
No comments:
Post a Comment