Dec 15, 2010

பாதிரியார் எரிப்பு வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடில்லி : ஒரிசாவில் பாதிரியார் மற்றும் அவரது இரண்டு மகன்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், தாராசிங்குக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரிசாவின் கோஞ்சகார் மாவட்டம், மனோகர்பூர் கிராமத்தில் கடந்த 99ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி, சர்ச்சுக்கு வெளியே ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்த பாதிரியார் கிரகம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களை தாராசிங் மற்றும் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு தீ வைத்து கொன்றனர் . இந்த வழக்கில் கீழ் கோர்ட், தாராசிங்குக்கு மரண தண்டனையும், அவரது கூட்டாளிகள் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. ஐகோர்ட்டில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டதில், தாராசிங்குக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 11 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து தாராசிங், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.பாதிரியார் மற்றும் அவரது மகன்கள் இருவரையும் உயிரோடு எரித்த தாராசிங்கின் காட்டுமிராண்டித் தனமான செயலுக்கு மரண தண்டனை தான் ஏற்றது, என, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் கூறப்பட்டது. சி.பி.ஐ., சார்பிலான வாதத்தை கேட்ட நீதிபதிகள் சதாசிவம் மற்றும் பி.எஸ்.சவுகான் ஆகியோர் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

No comments: