Dec 3, 2009

உலகின் மிக மோசமான விபத்து போபால் துயரம் – 25 ஆண்டுகள் நிறைவு


1984 டிசம்​பர் 2 ம் தேதி இரவு 10 மணி.

மத்​தி​யப் பிர​தேச மாநி​லம்,​ போபால் நக​ரில் உள்ள யூனி​யன் கார்​பைட் நிறு​வ​னத்​தின் கொள்​க​லன் 610-ல் தண்​ணீர் கலக்​கி​றது. அந்த டேங்க்​கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோ​ச​ய​னைட்,​ இந்​தத் தண்​ணீர் பட்​ட​தும் வேதி​யி​யல் மாற்​றம் அடை​கி​றது. 200 டிகிரி செல்​சி​யஸ் அள​வுக்கு வெப்​பம் உயர்​கி​றது. அழுத்​தம் தாங்​கா​மல் கொள்​க​ல​னின் பாது​காப்பு மூடி​கள் திறந்து கொள்​கின்​றன. நள்​ளி​ர​வில் விஷ​வாயு வெளி​யே​றிப் பர​வு​கி​றது...போபால் நகர் முழு​வ​தும்!​ ​

அப்​போது அந்​ந​க​ரின் மக்​கள் தொகை 5.2 லட்​சம். இவர்​க​ளில் 2 லட்​சம் பேர் சிறு​வர்​கள். 3000 பேர் கரு​வுற்ற தாய்​மார்​கள். ​

​டிசம்​பர்-3ம் தேதி காலை போபால் நகர மக்​கள் அனை​வ​ரும் கண்​ணெ​ரிச்​சல்,​ மூச்​ச​டைப்​பு​டன் கண்​வி​ழிக்​கின்​ற​னர். அன்​றைய ஒரு நாளில் மட்​டும் சுமார் 4000 பேர் இறந்​த​னர் என்று அதி​கா​ரப்​பூர்​வ​மாக அறி​விக்​கப்​பட்​டது.

உண்​மை​யில்,​ இறந்​த​வர்​க​ளின் எண்​ணிக்கை இரு மடங்கு என்று சொல்​லப்​ப​டு​கி​றது. அடுத்த 72 மணி நேரத்​தில் இறந்​த​வர்​கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்​பால் மெல்​லச் செத்​த​வர்​கள் 25,000 பேர். ​

​இன்​ன​மும் சாகா​மல் இருக்​கும் இரண்டு விஷ​யங்​க​ளில் முத​லா​வது,​ போபால் மாவட்ட நீதி​மன்​றத்​தில் நடை​பெ​றும்,​ யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தின் மீதான வழக்கு ஒன்​று​தான். இரண்​டா​வ​தாக,​ யூனி​யன் கார்​பைடு விட்​டுச்​சென்ற 390 டன் நச்சு வேதிப்​பொ​ருள்​கள் இன்​ன​மும் போபா​லின் நிலத்​தடி நீரைக் கெடுத்​துக் கொண்​டி​ருக்​கி​றது.

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இவ்விபத்தால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் இன்றும் எண்ணி்க்கை கூடிக் கொண்டிருக்கிறது. நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் வம்சமே தண்டனையை அனுபவி்த்து வருகிறது.

விபத்து நடந்த போது யூனியன் கார்பைடு தலைவராக இருந்த ஆண்டர்சனை கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் பலமுறை வாரண்ட் பிறப்பித்தது.

ஆனால், ஆனால், மத்திய புலனாய்வுத்துறை அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கப்படவில்லை. இந்திய அரசினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆண்டர்சன் இன்னமும் நியூயார்க் அருகில் உள்ள தீவு ஒன்றில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

உச்சநீதிமன்ற தலையீட்டால், யூனியன் கார்பைடு நிறுவனம் நஷ்ட ஈடாக தந்த ரூ.715 கோடியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு அடங்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இன்றளவும் குளறுபடிகள், ஊழல் புகார்கள் இருந்துவருகின்றன.

1989ம் ஆண்டு பிப்ரவரி 15ம்தேதி உச்சநீதிமன்றத் தின் தலையீடு காரணமாக ஏற்பட்ட உடன்பாட்டின் படி யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடி வழங்க வகை செய்தது. அரசுக் கணக்குப்படி 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகை எந்த வகை யிலும் போதுமானது அல்ல என்பது ஒருபுறமிருக்க, இதுவும் கூட முறையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என்று போபால் விபத்தால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் அப்துல் ஜப் பார் கூறியுள்ளார்.

இதனால் இறந்தவர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.25 ஆயிரமும் மட்டும்தான் 1992ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது என் றும் அவர் கூறினார். போபால் விஷவாயுவால் இறந்தோர் நினைவாக ரூ.114 கோடி செலவில் நினைவகம் அமைக் கப்போவதாக மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் அறிவித்துள்ளன. இறந்தவர்களுக்கு நினைவகம் அமைப்பதை விட இன்னமும் உயிரோடு இருந்து சித்ரவதைப் பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த தொகையை தரலாம் என்று தன்னார்வ அமைப்புகள் கூறியுள்ளன.

போபால் விஷவாயு விபத்து மாநிலங்களவையில் புதனன்று எதிரொலித்தது. மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் பாதிக்கப்பட்டோர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டுமென்று மாநிலங்களவைத் தலைவர் அன்சாரி வலியுறுத்தினார். இந்திய மக்களை என்றென்றைக்கும் உறுத்திக் கொண் டிருக்கும் ஒரு நிகழ்வாக போபால் பயங்கரம் உள்ளது. பாதிக்கப்பட்டவர் களுக்கு இன்னமும் கூட உரிய நிவாரணம் கிடைக்கா மல் இருப்பது அதை விட உறுத்தலாக உள்ளது என்று அன்சாரி கூறினார்.

எனினும், இன்று நாடாளுமன்றத்தில் போபால் சம்பவத்துக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுவிட்டது. நிவாரணம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படு்ம் என பிரதமர் மன்மோகன் ஏற்கனவே அறிக்கை வெளியி்ட்டுவிட்டார்.

No comments: