புதுதில்லி, அக். 25: தில்லியில் காஷ்மீர்ருக்கு சுதந்திரம் அளிக்கவேண்டும் நடந்த கருத்தரங்கில் தேச விரோதமாகப் பேசியதாகக் கூறி பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸýக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கெனவே இந்த கருத்தரங்கில் தேச விரோதமாகப் பேசியதாக காஷ்மீர் மாநில ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸôருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தில்லியில் அண்மையில் நடந்த கருத்தரங்கில் கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், மாவோயிஸ்டு ஆதரவு தலைவர் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
தேச விரோதமாகவும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் கருத்தரங்கில் பேசியதாக கூறி பாஜக உள்ளிட்ட ஹிந்து தீவிரவாத கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன.
தேச விரோதமாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து தீவிரவாத அமைப்பான பாஜக மூத்த தலைவர் தீவிரவாதி அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து தில்லி போலீஸôர் ஆலோசித்து வருகின்றனர்.கிலானி மீது ஏற்கெனவே 90 வழக்குகள் உள்ளன. இது 91-வது வழக்கு என்று அவர் கூறியுள்ளார்.
ஹிந்து தீவிரவாத அமைப்புகளின் நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்தது. மனித உரிமை போராளிகள் மீது வழக்கு தொடர அனுமதி அளித்தது இந்தியாவில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறைமுக ஹிந்துதுவா ஆட்சி நடப்பதையும் இது காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் நடப்பது சர்வாதிகார ஹிட்லர் ஆட்சியை ஒத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment