ராஞ்சி, அக்.25- ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு ஹிந்து தீவிரவாத அமைப்பு என்று உண்மையை சொல்லியாதால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஷிஷ் குமார் சிங் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் போபால் நகரில் பேசியபோது, ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துடன் ஒப்பீடு செய்து ராகுல் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து ராகுல் காந்தியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment