Aug 9, 2010

காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் உயர்ஜாதி பண்டிட்டுகள்.

வாஷிங்டன், ஆக.9: காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்து வரும் ஹிந்துக்களுக்கு இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீர் அமெரிக்க கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து காஷ்மீர் ஹிந்து அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் தீபக் கஞ்சு கூறியதாவது: காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக அங்கு ஏராளமான உயிரிழப்புகளும், உடைமை இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே அங்கு வசித்து வரும் சில நூறு ஹிந்து குடும்பங்களுக்கு மாநில அரசு பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றார். மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதற்கு ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ மற்றும் துணை ராணுவப் படைகளை உடனடியாக திரும்பப்பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுனார்.

சிந்திக்க: காஸ்மீரில் இவ்வளவு காலமாக முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டு வந்தபோது எதுவும் சொல்லாத இந்த அமெரிக்க பண்டிட்டுகள் ஒரு நூறு ஹிந்து குடும்பத்திற்கு குரல்கொடுக்கும் கேவலத்தை பாருங்கள். இவர்கள் எல்லாம் மனிதாபிமானம் உள்ளவர்களா?இவர்களை ஜாதிவெறி பிடித்த மதவெறி பிடித்த அயோக்கியர்கள் என்று சொல்வதை தவிர வேறு எண்ண இருக்கிறது.

No comments: