Jun 24, 2010

தடையை எதிர்த்து பிரிட்டிஷ் உயர்நீதிமன்றத்தை அணுகும் டாக்டர்.ஜாகிர் நாயக்.

மும்பை:இஸ்லாமிய பிரச்சாகரான டாக்டர்.ஜாகிர் நாயக், இங்கிலாந்திற்குள் நுழைய தடை செய்யப்பட்டதை எதிர்த்து பிரிட்டிஷ் உயர்நீதி மன்றத்தை அணுகப்போவதாக அவர் கூறியுள்ளார்.தான் என்ன காரணங்களுக்காக பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டேன் என்பதை ஹெட்லைன்ஸ் டுடே நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இரண்டு காரணங்களை கூறியுள்ளார். ஒன்று இஸ்லாம் பிரிட்டன், அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் வேகமாக பரவிவருவதை சகிக்க முடியாமை இரண்டாவது அரசியல் ரீதியாக பிரிட்டன் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதை காட்டுவதாகும் என்று தெரிவித்துள்ளார்.இப்பேட்டியினை முழுமையாக இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணவும்.

No comments: