Feb 4, 2010

முதல் இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்: ஒபாமா.

வாஷிங்டன்,பிப்.3: இந்த நூற்றாண்டில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.​ இதை எதிர்காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா.

​ஆசிய நாடுகளான சீனாவும்,​​ இந்தியாவும் அனைத்து விதத்திலும் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன.​ எனினும் இவ்விரு ஆசிய நாடுகளோ,​​ ஐரோப்பிய நாடுகளோ அமெரிக்காவைப் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை.​ எங்களுக்கு சொந்தமான முதல் இடத்தை நாங்கள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வோம் என்றும் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

பொருளாதார தேக்க நிலையால் நடுத்தர மக்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.​ அவர்களது கஷ்டம் நீங்கி,​​ நல்வாழ்வு பெற வேண்டும்.​ தொழிலாளர்களுக்கான ஊதியம் மீண்டும் உயர வேண்டும்.​ ​ நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சியுற வேண்டும்.​ அவ்வாறு எழுச்சியுறும் பொருளாதாரம் சிலருக்கு மட்டுமே பலனளிப்பதாக இருக்கக்கூடாது.​ ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.​ இதையே நான் விரும்புகிறேன்.​ அனைத்துவிதத்திலும் நாட்டை வலுப்படுத்தி முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.​ இதற்காக அயராது பாடுபடுவேன் என்றார் ஒபாமா.

No comments: