Nov 13, 2009

அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் பன்றிக்காய்ச்சல் நோய்

அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு இதுவரை 540 குழந்தைகள் உள்பட 4 ஆயிரம் பலியாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை பன்றிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து புதிய முறையில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள 10 மாகாணங்களில் பன்றிக்காய்ச்சலில் இறந்தவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இந்த 10 மாகாணங்களில் இருந்தும் மொத்தம் 4,000 பேர் உயிரிழந்ததாக நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது.

இத்தகவல்கள் அடிப்படையில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவலைத் தடுக்கவும், அதன் பாதிப்பு குறித்தும் ஆய்வுசெய்து வருகின்றனர்.

No comments: