Nov 18, 2009

இந்தியாவின் பொருளாதாரம் அழிவு வழியில் பயன்படுத்தபடுகிறது.


இந்​தி​யா​வின் வேண்​டு​கோ​ளின் பேரில் கட்​டப்​பட்​டுள்ள அணு​சக்தி நீர்​மூழ்​கிக்​கப்​பலை டிசம்​ப​ருக்​குள் ஒப்​ப​டைக்க ரஷியா முடி​வெ​டுத்​துள்​ளது. நெர்பா அணு​சக்தி நீர்​மூழ்​கிக் கப்​பல் கட்​டும் பணி முழு​மை​யாக நிறை​வ​டைந்​து​விட்​டது. கப்​பல் தற்​போது அமுர் கப்​பல் கட்​டும் தளத்​தி​லேயே நிறுத்​தி​வைக்​கப்​பட்​டுள்​ளது. சோதனை ஓட்​டம் நடத்​து​வ​தில் தாம​தம் ஏற்​ப​டு​வ​தால்​தான் இந்​தி​யா​வி​டம் கப்​பல் ஒப்​ப​டைப்​ப​தில் தாம​தம் ஏற்​ப​டு​கி​றது. எனி​னும்,​ டிசம்​ப​ருக்​குள் அணு​சக்தி நீர்​மூழ்​கிக்​கப்​பல் எப்​ப​டி​யும் இந்​தி​யா​வி​டம் ஒப்​ப​டைக்​கப்​பட்​டு​வி​டும் என்று கபா​ரோவ்ஸ்க் ஆளு​நர் வியா​செஸ்​லேவ் தெரி​வித்​தார்.

நெர்போ அணு​சக்தி நீர்​மூழ்​கிக்​கப்​பல் 10 ஆண்​டு​க​ளுக்கு குத்​தகை அடிப்​ப​டை​யில் இந்​தி​யா​வுக்கு அளிக்​கப்​ப​டும். இதற்கு இந்​தி​யா​வி​டம் இருந்து ரூ.3250 கோடியை ரஷியா பெற்​றுக்​கொள்​ளும்.

No comments: