Mar 9, 2016

மோடி அரசு இஞ்சி தின்ற குரங்கு மாதிரி முழிக்கிறது!

டெல்லி "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்ஹையா குமார் தேசத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார் எனக் குற்றம் சாட்டினார்கள். தேசத் துரோகி என்று பார்பன ஹிந்துத்துவா ஊடகங்கள் இவரை கட்டம் கட்டின எழுதின. 
இவர் பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை எழுப்பினார் என்று பிரிவினைவாத குற்றத்தை வீடியோ ஆதாரத்தோடு சுமத்தி கைது செய்தார்கள். ஆனால் அது "தயாரிக்கப்பட்ட வீடியோ"என்று நிரூபனம் ஆனது.
அவர் மிகப் பின்தங்கிய மாநிலமான பிகாரில் இருந்து வந்த மாணவர். இவரது அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார். அம்மா ஒரு கடையில் வேலை செய்கிறார். மிக ஏழ்மையானக் குடும்பம். தன் முயற்சியில் படித்து முன்னுக்கு வந்தவர் தான் இந்த கன்ஹையா குமார்.
இவர் தேர்வெழுதி தேறி, ஜே.என்.யூவில் சேர்ந்தவர். ஜே.என்.யூவிற்கு தனி வரலாறு உண்டு. மத்திய அரசியல் பல நேரங்களில் தறிக் கெட்டு ஓடிய நேரத்தில், அதற்கு மூக்கணாங்கயிறு போட்ட பெருமை இந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கே உண்டு. அந்த அளவிற்கு சுயசிந்தனையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் இடம். 
கன்ஹையா குமாரோ வளரும் போதே, குடும்பத்தாரைப் போலவே கம்யூனிஸ்டாக வளர்ந்தவர். அதனால் தான் டெல்லி வந்தப் போது இன்னும் கூர்மையானார். அகில இந்திய மாணவக் கூட்டமைப்பின் தலைவர் ஆனார். இது இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு. பொறுப்பிற்கேற்றார் போல் இந்துத்துவாவிற்கு எதிராகக் குரல் எழுப்பினார். இதனால் இவரை அடக்கிப் போட மத்திய பாரதிய ஜனதா ஹிந்துத்துவா பயங்கரவாத அரசு முனைந்தது. இதனாலேயே இவர் மீது இத்தனை அராஜகங்களும், அத்துமீறல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.  நடுநிலையாளர்களும், மாணவர்களும், அனைத்து கட்சிகளும் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அவர் விடுவிக்கபட்டார். மோடி அரசு இஞ்சி தின்ற குரங்கு மாதிரி முழிக்கிறது. புதையல் எடுக்க நினைத்து பூதம் வந்த கதையாக திகைத்து போனது. 

No comments: